Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசின் சம்பள அதிகரிப்பு ஒரு கையால் கொடுத்து மறு கையால் வாங்குவதை போன்றது

January 8, 2022
in News, Sri Lanka News
0
அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு! – அரசாங்கம் அறிவிப்பு

அரசாங்கம் அறிவித்துள்ள அரச ஊழியர்களுக்கான 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு ஒரு கையால் கொடுத்து மறுகையால் வாங்குவதைப் போன்றது. எனவே, இதனால் அரச ஊழியர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை எனத் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டுக்கு நிலையான பொருளாதார அபிவிருத்தியை உருவாக்கும் எந்தத் திட்டமும், அரசிடம் இல்லை. இதனால் உற்பத்திகள் குறைவடைந்து விட்டன. பொருட்களுக்கு ஏற்கனவே தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. விலையும் அதிகரித்து விட்டது.

மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டு விட்டது. அரசிடம் இப்போது பாரிய நிதி நெருக்கடி காணப்படுகின்றது.

இதனைச் சமாளிக்கப் பெருமளவு ரூபா நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளன. உற்பத்தி இல்லாமல் பணத்தை மட்டும் அச்சிடுவதால் பணவீக்கம் ஏற்படும். பொருட்களின் விலை பாரியளவு உயரும் என்பது இப்போது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகி விட்டது.

இவ்வாறு அச்சிட்ட பணத்தின் மூலம் தான் அரசாங்க ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை அரசு அறிவித்துள்ளது. அச்சிட்ட பணம் நடைமுறைக்கு வரும் போது பொருட்களின் விலை இன்னும் அதிகரித்து விடும்.

அப்போது இந்த சம்பள அதிகரிப்பினால் எந்தப் பிரயோசனமும் அரச ஊழியர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. மாறாக விலை அதிகரிப்பினால் 5 ஆயிரத்தை விட அதிக தொகையைப் பொருட்களுக்காகச் செலவிட வேண்டி வரும்.

மிக அண்மையில் தான் வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத்திட்டத் திட்டத்தில் சம்பள உயர்வு பற்றி அறிவிக்கப்படவில்லை.

இது இல்லாமலே அரசாங்கத்தின் செலவு விபரமும், வரவு விபரமும் அறிவிக்கப்பட்டதோடு துண்டு விழும் தொகையை ஈடு செய்யும் வழிமுறைகளும் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் இப்போது அரசு அறிவித்துள்ள சம்பள அதிகரிப்பினால் ஏற்படும் செலவை ஈடு செய்ய அரசு என்ன செய்யப் போகின்றது என்பதைச் சிந்தித்துப் பார்த்ததால் பொருட்களின் விலை இன்னும் எவ்வளவு அதிகரிக்கப் போகின்றது என்ற உண்மை விளங்கும்.

வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக இல்லாத அக்கறை இப்போது எப்படி அரசாங்கத்திற்கு வந்தது. ஏன் வந்தது என்பதைக் கேட்க விரும்புகின்றேன். இப்போது விடிந்தால் எந்தப் பொருட்களின் விலை அதிகரித்திருக்கும் என்ற அச்சத்தினால் தான் மக்கள் தூக்கத்திற்குப் போகின்றார்கள்.

அந்த நிலை இன்னும் தொடரப் போகின்றது என்பதையே அரசாங்கத்தின் இந்த சம்பள அதிகரிப்பு சுட்டிக்காட்டுகின்றது. விலை அதிகரிப்பினால் நாட்டிலுள்ள சகல மக்களும் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே, எல்லா மக்களுக்கும் பயன்தரக் கூடிய வகையில் உறுதியான பொருளாதாரத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

சத்தான ஸ்நாக்ஸ் சாமை ரிப்பன் பக்கோடா

Next Post

அரசாங்கத்தின் தோல்விக்கு இதுவே காரணமாம் | கோட்டாபய சொல்லும் கதை

Next Post
கோத்தபாயவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியா?

அரசாங்கத்தின் தோல்விக்கு இதுவே காரணமாம் | கோட்டாபய சொல்லும் கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures