Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் உப்பு தீபம்

December 26, 2021
in News, ஆன்மீகம்
0
பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் உப்பு தீபம்

உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால் உப்பு தீபம் ஏற்றினால் மகாலட்சுமியின் அருள் கிடைப்பதாக ஐதீகம் உள்ளது. உப்பு தீபம் ஏற்றுவதால் தீரும் பிரச்சனைகளை அறிந்து கொள்ளலாம்.

சிறிய பூஜை செய்யக்கூடிய தாம்பூல தட்டில் கல் உப்பை பரப்பி, அதன்மேல் அகல் விளக்கு ஒன்றை புதிதாக வைத்து, 2 பஞ்சு திரி இட்டு நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது தான் உப்பு தீபம் ஆகும். உப்பின் மீது எரியும் ஜோதிக்கு சக்தி அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் மற்ற தீபங்களை காட்டிலும் உப்பு தீபம் ஏற்றுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகளும் அதிகமானதாக இருக்கும்.

உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு கொடுக்கும் பகைவர்கள் தொல்லை நீங்க, வெள்ளிக்கிழமை தோறும் உப்பு தீபம் ஏற்றலாம். எவ்வளவு குடைச்சலை உங்களுக்கு பகைவர்கள் கொடுத்துக் கொண்டிருந்தாலும் அவர்களை செயல்படாமல் செய்துவிடும் இந்த உப்பு தீப வழிபாடு. அதற்காக மனதில் வஞ்சம் வைத்துக் கொண்டு எந்த ஒரு பரிகாரத்தையும் செய்யக்கூடாது. வஞ்சம் இல்லாத, துன்பம் நீங்க கூடிய வகையில் உங்கள் பிரார்த்தனைகள் இருந்தால் நிச்சயம் உங்கள் வேண்டுதல் பலிக்கும்.

பணப் பிரச்சினையில் கஷ்டப்படுபவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தொழில் விருத்தி உண்டாக, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர, பதவி உயர்வு கிடைக்க, மனதில் நினைத்த விஷயங்கள் நடைபெற, நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற, பிள்ளை வரம் வேண்டுபவர்கள், மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினத்தில் உப்பு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வேண்டுதல் பலிக்கும் என்பது நம்பிக்கை. மற்றவர்களை அழிக்கும் நோக்கத்துடனும், சுயநல எண்ணத்துடனும் உப்பு தீப வழிபாடு செய்தால் எதிர்வினையையும் சந்திப்பீர்கள்.

சிறிய பூஜை செய்யக்கூடிய தாம்பூல தட்டில் கல் உப்பை பரப்பி, அதன்மேல் அகல் விளக்கு ஒன்றை புதிதாக வைத்து, 2 பஞ்சு திரி இட்டு நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது தான் உப்பு தீபம் ஆகும். உப்பின் மீது எரியும் ஜோதிக்கு சக்தி அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் மற்ற தீபங்களை காட்டிலும் உப்பு தீபம் ஏற்றுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகளும் அதிகமானதாக இருக்கும்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

“ஒமிக்ரோனை தடுக்க மூன்று முகக்கவங்கள்” பரிந்துரைக்கும் நிபுணர்கள்

Next Post

கிறிஸ்து பிறப்பும் நற்செய்தியும்

Next Post
கிறிஸ்து பிறப்பும்  நற்செய்தியும்

கிறிஸ்து பிறப்பும் நற்செய்தியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures