Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் விமல் திரைப்படத்தில் உதவி இயக்குனராக யாழ்ப்பாண இளைஞர்

November 27, 2021
in Cinema, News
0
நடிகர் விமல் திரைப்படத்தில் உதவி இயக்குனராக யாழ்ப்பாண இளைஞர்
உதய் புரோடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார் விமல்

இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கும் புதிய படம் உருவாகி கொண்டிருக்கிறது குடும்ப உறவுகளையும் மையமாக வைத்து உருவாகியுள்ள புதிய படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் பாண்டியராஜன் விமலின் தந்தையாக நடிக்கிறார் சகோதரியாக அனிதா சம்பத் நடிக்கிறார். தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க போராடும் ஒரு அண்ணனின் வாழ்வை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள்: விமல்,அனிதா சம்பத், பாண்டியராஜன், வத்சன் வீரமணி, ஆடுகளம் நரேன், பாலசரவணன்
, தீபா, நேகா ஜா.

இத்திரைப்படத்தில் இலங்கையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜெனோசன் ராஜேஸ்வர் தற்போது உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகின்றார்.

குறிஞ்சி கிறியேசன்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஊடாக தயாரிப்பாளர், மக்கள் தொடர்பாளர், தயாரிப்பு நிர்வாகி என பல துறைகளில் பணியாற்றிய இவரது இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் இறகெனும் நினைவுகள் எனும் கவிதைப்பாடல் தென்னிந்தியாவின் விகடன் சினிமா யூடியுப் தளத்தில் வெளியாகி அங்கீகாரம் பெற்றிருந்தது.

இந்நிலையில் மீண்டும் உதவி இயக்குனராக ஒரு முழுநீளத்திரைப்படத்தில் பணியாற்றும் எண்ணம் இருப்பதனாலும் சினிமாவின் உருவாக்கித்திறனுக்கு படப்பிடிப்பு சார்ந்த அறிவு இன்னும் திறம்பட செயற்படும் என்பதனாலும் தற்போது பெயரிடப்படாத நடிகர் விமலின் இந்த திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிகின்றார்.

ஒரு திரை உருவாக்கத்திற்கு களப்பணியின் அறிவு மிக முக்கியமானது. அதுவும் இலங்கையில் வர்த்தகரீதியான சினிமா உருவாக்கத்திற்கு சினிமாவை திறம்பட உருவாக்கினால் மட்டுமே சாத்தியாமாகும் எனவும் இலங்கை தமிழ் சினிமாவில் வருடத்திற்கு சரியாக சொல்ல முடியாத அளவிற்கு திரைப்படங்கள் உருவாக்கப்படுவதில்லை எனவும் ஜெனோசன் கூறிகின்றார்.

குறும்படங்கள், பாடல்கள் என்பவற்றை தாண்டி முழுநீளத்திரைப்படம் என்பது ஒரு சினிமா கலைஞனின் மாபெரும் கனவு அதை நோக்கி பயணிப்பதற்கான படிகளே இவை என்றும் குறிப்பிடுகின்றார்.

Previous Post

ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்

Next Post

அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்! வல்வெட்டித்துறையில் குவிக்கப்பட்ட இராணுவமும் பொலிஸாரும்

Next Post
அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்! வல்வெட்டித்துறையில் குவிக்கப்பட்ட இராணுவமும் பொலிஸாரும்

அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்! வல்வெட்டித்துறையில் குவிக்கப்பட்ட இராணுவமும் பொலிஸாரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures