Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Health

தொற்றுநோய் கிருமிகள் குழந்தைகளை தொட்டுவிடக்கூடாது

November 5, 2021
in Health, News
0
தொற்றுநோய் கிருமிகள் குழந்தைகளை தொட்டுவிடக்கூடாது

குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கண்ட இடங்களில் கையைவைக்க அனுமதித்துவிடக் கூடாது.

தூய்மையான இந்தியாவை உருவாக்குவது ஒவ்வொருவரின் கடமை. அந்த கடமையை அனைவருமே நிறைவேற்றவேண்டும். ஒரே நாளில் இதை நிறைவேற்றிட முடியாது. முதலில் இதை நன்றாக புரிந்துகொண்டு, படிப்படியாக செயல்படுத்த முன்வரவேண்டும். அதன் மூலம் நிச்சயமாக நல்ல மாற்றத்தை உருவாக்கிட முடியும்.

மனிதர்கள் பயன்படுத்தும் இடங்களை மூன்றாக பிரிக்கலாம். அவை: வீடு, பொதுஇடங்கள், அலுவலகங்கள். இதில் வீட்டை பெரும்பாலும் அனைவருமே தூய்மையாகத்தான் வைத்திருக் கிறார்கள். அலுவலகங்களும் பெரும்பாலும் தூய்மையடைந்துவிடுகின்றன. தூய்மையின்மை அதிகம் தென்படுவது பொதுஇடங்களில்தான்.

வீட்டைவிட்டு வெளியே செல்லும் மக்கள் அனைவரும் பொதுகழிப்பிடங்களை பயன்படுத்துகிறார்கள். அதனை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது பயன்படுத்தும் ஒவ்வொருவரின் கடமையாகும். இதில் மிகுந்த விழிப்புணர்வு அவசியம். விமான நிலையம், ரெயில் நிலையம், திரையரங்கு, பெரிய மால்கள், பூங்காக்கள், சாலையோரம் என்று எல்லா இடங்களிலும் பொது கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தங்கள் பங்குக்கு மக்கள் அதை தூய்மையாக வைத்திருக்க உதவ வேண்டும்.

பெரும்பாலான தொற்று வியாதிகள் பொது கழிப் பறைகளில் இருந்து உருவாகின்றன. பலரும் பயன்படுத்தும் கழிப்பிடங்களில் தொற்று நோய் கிருமிகள் அதிகமாகவே காணப்படும். இது தவிர்க்க முடியாதது. பயன்படுத்திய பின் தண்ணீரை ‘ப்ளஷ்’ செய்துவிட்டு வரவேண்டியது அவசியம். பின்பு கைகளால் கழிப்பறை கதவை திறக்கும் போது கைகளிலும் விரல்களிலும் கிருமிகள் பரவும். கைகளை சோப்பு போட்டு கழுவி துடைத்து சிறிது நேரம் காயவைத்து தூய்மையாக்கிக்கொள்ளவேண்டும்.

கழிப்பிடம் தானே என்று கண்ட இடத்தில் துப்புவது கூடாது. கைப்பைகளை வெளியில் வைத்துவிட்டு உள்ளே செல்லவேண்டும். அதற்கு வாய்ப்பில்லாமல் பொது கழிப்பிடத்தின் உள்ளே பையை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்த பையை அப்படியே எடுத்துக்கொண்டு போய் சமையல் அறையிலோ, டைனிங் டேபிளிலோ வைத்துவிடக்கூடாது. தகுந்த முறையில் தூய்மை செய்த பின் தான் அதனை பயன்படுத்தவேண்டும்.

வெகுதூரம் வெளியில் பயணிக்கும்போது கையோடு சானிடரி டிஷ்யூ, ஹேண்ட் வாஷ் போன்றவைகளை கொண்டு செல்லவேண்டும். அவைகளை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கண்ட இடங்களில் கையைவைக்க அனுமதித்துவிடக் கூடாது.

பராமரிப்பு பணியாளர்கள் சுத்தப்படுத்தினாலும், நம் பங்கிற்கு நாமும் சுத்தத்தை பேண முன்வர வேண்டும்.

தூய்மையான பாரதத்தில் பொதுகழிப்பிட சுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது.

குப்பை தொட்டியில் போடவேண்டிய பொருட்களை டாய்லெட்டில் போட்டுவிடக் கூடாது.

அங்கிருக்கும் தண்ணீர் குழாய் சரியாக மூடப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும்.

டாய்லெட்டை பயன்படுத்தும் முன்பும், பயன்படுத்திய பின்பும் தண்ணீரால் சுத்தம் செய்யுங்கள்.

பொதுகழிப்பிடங்களில் உங்கள் ஒவ்வொரு செயல்பாடும் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் அமையட்டும்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

அண்ணாத்த படம் வெளியானது | ரசிகர்கள் கொண்டாட்டம்

Next Post

உடல் எடையை குறைக்க உதவும் மாதுளை

Next Post
உடல் எடையை குறைக்க உதவும் மாதுளை

உடல் எடையை குறைக்க உதவும் மாதுளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures