Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நேருக்கு நேர் முதல் தடவையாக சந்திக்கும் இங்கிலாந்து – பங்களாதேஷ்

October 27, 2021
in News, Sports
0
மீண்டும் அசத்திய குசால் மெண்டிஸ்: இலங்கை 281 ஓட்டங்கள் குவிப்பு

இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகள் மோதும் குழு 1 க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டி அபு தாபியில் இன்று பிற்பகல் (3.30 மணி) நடைபெறவுள்ளது.

இருபது 20 கிரிக்கெட் யுகத்தில் இந்த இரண்டு அணிகளினதும் வீரர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் இருபது 20 கிரிக்கெட் லீக் போட்டிகளில் ஒன்றாகவும் எதிராகவும் விளையாடிவந்துள்ளனர்.

ஆனால், இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தேசிய அணிகள் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.

நடப்பு இருபது 20 உலகக் கிண்ணத்தில் இந்த இரண்டு அணிகளும் தத்தமது இரண்டாவது போட்டியில் இன்று விளையாடவுள்ளன.

இங்கிலாந்து அதன் முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 55 ஓட்டங்களுக்கு சுருட்டி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியதுடன், இன்று 2 ஆவது வெற்றிக்கு குறிவைத்து களம் இறங்கவுள்ளது.

மறுபுறத்தில் முதல் சுற்றில் ஸகொட்லாந்திடம் முற்றிலும் எதிர்பாராத விதமாகவும் சுப்பர் 12 சுற்றில் இலங்கையிடம் கடும் போராட்டத்துக்கு மத்தியிலும் தோல்வி அடைந்த பங்களாதேஷ் அத் தோல்விகளை நிவர்த்தி செய்வதற்கு இன்று முயற்சிக்க உள்ளது.

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தரவரிசையில் முதலாம் இடத்திலுள்ள இங்கிலாந்து, எதிரணியின் சவாலை  குறைத்து மதிப்பிடாமல் சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடவுள்ளது.

இங்கிலாந்து தனது அணியில் மாற்றம் எதுவும் செய்யாமல் விளையாடுவதை விரும்பக்கூடும்.

ஆனால், வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் மார்க் வூட் தற்போது பூரண உடற்தகுதியைக் கொண்டுள்ளதால் அணியில் இடம்பெறுவதற்கு தயாராக உள்ளார்.

எனவே துடுப்பாட்ட வீரர் ஒருவருக்குப் பதிலாக அவரை அணியில் சேர்ப்பது குறித்து இங்கிலாந்து ஆலோசிக்கலாம் என கருதப்படுகின்றது.

மறுபுறத்தில், வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாய நிலையில் உள்ள பங்களாதேஷ், மிகச் சிறந்த வியூகங்களை அமைத்து கடும் முயற்சியுடன் விளையாடவுள்ளது.

பங்களாதேஷ் அணியின் பயிற்றுநர் ஒட்டிஸ் கிப்சன், சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்து அணியுடனும் இணைந்து செயற்பட்டிருந்தார்.

இதன் காரணமாக இங்கிலாந்தின் நேர்மறையான அணுகுமுறைகளை, பலம், பலவீனங்களை அவர் நன்கு அறிவார். இந்த அறிவுகளைப் பயன்படுத்தி அவர் பங்களாதேஷ் அணியினரை பொறுமையுடன் திட்டங்களை ஆடுகளத்தில் செயற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இன்றைய போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றால், குழு 1 இல் முதலாம் இடத்துக்கு முன்னேறும். அத்துடன் அரை இறுதிக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொள்ளும். பங்களாதேஷ் வெற்றிபெற்றால் இக் குழுவில் 5 அணிகள் தலா 2 புள்ளிகளுடன் எஞ்சிய போட்டிகளை எதிர்கொள்ளும்.

இந்த இரண்டு அணிகளிலும் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களும் பந்துவீச்சாளர்களும் இடம்பெறுவதால் இப் போட்டி விறுவிறுப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் சகலதுறை வீரர்களான ஷக்கிப் அல் ஹசன், மொயின் அலி ஆகியோரின் பங்களிப்புகள் இப் போட்டியில் திருப்பங்களை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கும் எனவும் கருதப்படுகின்றது.

அணிகள்

இங்கிலாந்து: ஜேசன் ரோய், ஜொஸ் பட்லர், ஜொனி பெயார்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், ஒய்ன் மோர்கன் (தலைவர்), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டன், ஆதில் ராஷித், மார்க் வூட், டய்மல் மில்ஸ்.

பங்களாதேஷ்: மொஹம்மத் நய்ம், லிட்டன் தாஸ், ஷக்கிப் அல் ஹசன், முஷ்பிக்குர் ரஹிம், மஹ்முதுல்லாஹ் (தலைவர்), அபிப் ஹொசெய்ன், நூருள் ஹசன், மஹெதி ஹசன், மொஹம்மத் சய்புதின், தஸ்கின் அஹ்மத், முஸ்தாபிஸுர் ரஹ்மான். – (என்.வீ.ஏ.)


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

முன்னணி கழகங்கள் பங்கேற்கும் 50 ஓவர்கள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்

Next Post

தாதா சாகேப் பால்கே விருதுக்கு கமல், பாரதிராஜா, இளையராஜாவுக்கும் தகுதி இருக்கு: வைரமுத்து

Next Post
தாதா சாகேப் பால்கே விருதுக்கு கமல், பாரதிராஜா, இளையராஜாவுக்கும் தகுதி இருக்கு: வைரமுத்து

தாதா சாகேப் பால்கே விருதுக்கு கமல், பாரதிராஜா, இளையராஜாவுக்கும் தகுதி இருக்கு: வைரமுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures