Tuesday, August 5, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்

October 20, 2021
in News, ஆன்மீகம்
0
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமிக்கு, ஐப்பசி மாத பவுர்ணமி நட்சத்திர பிரகாரப்படி, நாளை (வியாழக்கிழமை) மாலை அன்னாபிஷேகம் நடக்கிறது.

உயிர்களை இயக்கும் சக்தி படைத்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம். அத்தனை சிவன் கோவில்களிலும் ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னவடிவில் இருப்பதாக சாமவேதத்தில் கூறப்பட்டுள்ளது. அன்னமும் லிங்க வடிவில் உள்ளது.

ஐப்பசியில் வரும் பவுர்ணமி அன்று சந்திரன் தனது அமிர்த கலையாகும் 16 கலைகளுடன் பூரண சோபையுடன் பிரகாசிக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை வரும் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று சிவாலயங்களில் சாயரட்சையின்போது சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

அதன்படி, இன்று (புதன்கிழமை) ஐப்பசி பவுர்ணமி தினமாகும். அதையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடக்கிறது. சிவன் காலடியில் படைக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டால் நோய் நொடிகள் வராது. குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் ஐதீகம். மேலும் பஞ்சபூதங்களை வழிபட்ட புண்ணியமும் கிட்டும் என்பதாகும். தற்போது அனைத்து நாட்களிலும் கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலின் தெற்கு மூலையில் உள்ள குபேர லிங்கத்திற்கு இன்று (புதன்கிழமை) மாலை அன்னாபிஷேகம் நடக்கிறது. இதுபோல நந்தி கோவில் தெருவில் உள்ள நாகநாதர் கோவிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.

திருச்சி உறையூர் பஞ்சவர்ணசாமி கோவிலில் இன்று மாலை 6 மணி அளவில் சுமார் 100 கிலோவுக்கு மேல் சாதம் வடித்து மூலவருக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதே போன்று திருச்சி உறையூரில் உள்ள தாந்தோன்றீஸ்வரர் கோவில், முசிறியில் சந்திரமவுலீஸ்வரருக்கும் அன்னாபிஷேகம் நடக்கிறது.

இதேபோல் லால்குடி சப்தரிஷ்வரர், பூவாளூர் திருமூலநாதர், மாந்துரை சாமவேதீஸ்வரர், புள்ளம்பாடி சிதம்பரவேதீஸ்வரர், கல்லக்குடி பசுபதீஸ்வரர் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடக்கிறது.

தொட்டியம் திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் கோவிலில் இன்று மாலை 4 மணிக்கும், பாலசமுத்திரம் கல்யாண பாலாம்பிகை சமேத கல்யாணசோமேஸ்வரர் கோவில், திருஈங்கோய்மலை மரகதாம்பிகை சமேத மரகதாசலேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் மாலை 5 மணிக்கும், மாராச்சிப்பட்டி அபிராம்பிகை சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மாலை 6 மணிக்கும், அரசலூர் சுகந்தகுஜலாம்பிகை சமேத தாயுமானசுவாமி கோவிலில் மாலை 5 மணிக்கும் அன்னாபிஷேகம் நடக்கிறது.

சமயபுரம் மாரியம்மன் கோவில் கட்டுப்பாட்டிலுள்ள போஜீஸ்வரர்கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாத சுவாமி கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் இன்று மாலை 5 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதேபோல் துறையூர், மணப்பாறை, உப்பிலியபுரம் பகுதிகளில் உள்ள சிவன்கோவில்களிலும் இன்று (புதன்கிழமை) அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தில் திருக்காமேஸ்வரர், தா.பேட்டையில் காசி விசுவநாதர், மங்கலம் கிராமத்தில் மங்கைபாகேஸ்வரர், காருகுடி கைலாசநாதர் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் இன்று அன்னாபிஷேகம் நடக்கிறது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமிக்கு, பவுர்ணமி நட்சத்திர பிரகாரப்படி, நாளை (வியாழக்கிழமை) மாலை அன்னாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை தொடங்கி, பின்னர் தாயுமானவர் சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் நூற்றுக்கால் மண்டபத்தில் அன்னதானமும் வழங்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து தீபாராதனை நடத்தப்படுகிறது. மாலை 4.30 மணிக்கு மேல் கோவில் நிர்வாகம் சார்பில் மகா அன்னாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ஆப்கான் பொருளாதார வீழ்ச்சி அண்டை நாடுகளை பாதிக்கும் | சர்வதேச நாணய நிதியம்

Next Post

45 வயதானவரை திருமணம் செய்து எதிர்ப்பை சமாளிக்கும் இளம்பெண்

Next Post
45 வயதானவரை திருமணம் செய்து எதிர்ப்பை சமாளிக்கும் இளம்பெண்

45 வயதானவரை திருமணம் செய்து எதிர்ப்பை சமாளிக்கும் இளம்பெண்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது சிங்கப்பூரிற்கு தப்பிச்செல்ல மாலைதீவில் காத்திருக்கும் கோட்டாபய !

ராஜபக்ச மகன்களால் அழிக்கப்பட்ட கோட்டாபய : காலம் கடந்து வெளிவரும் தகவல்

August 5, 2025
பின்னணி பாடகராக அறிமுகமாகும் நடிகர் புகழ்

பின்னணி பாடகராக அறிமுகமாகும் நடிகர் புகழ்

August 5, 2025
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி | ஆஸ்திரேலியா 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டெஸ்டில் 6 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா தொடரை 2 – 2 என சமப்படுத்தியது

August 4, 2025
வவுனியாவில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞன் கைது

வவுனியாவில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞன் கைது

August 4, 2025

Recent News

ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது சிங்கப்பூரிற்கு தப்பிச்செல்ல மாலைதீவில் காத்திருக்கும் கோட்டாபய !

ராஜபக்ச மகன்களால் அழிக்கப்பட்ட கோட்டாபய : காலம் கடந்து வெளிவரும் தகவல்

August 5, 2025
பின்னணி பாடகராக அறிமுகமாகும் நடிகர் புகழ்

பின்னணி பாடகராக அறிமுகமாகும் நடிகர் புகழ்

August 5, 2025
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி | ஆஸ்திரேலியா 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டெஸ்டில் 6 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா தொடரை 2 – 2 என சமப்படுத்தியது

August 4, 2025
வவுனியாவில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞன் கைது

வவுனியாவில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞன் கைது

August 4, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures