Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இருசக்கர வாகனங்களை பராமரிப்பது எப்படி?

October 18, 2021
in News
0
இருசக்கர வாகனங்களை பராமரிப்பது எப்படி?

இருசக்கர வாகனங்களை அதன் உற்பத்தியாளர்கள் ஆலோசனைப்படி சீரான இடைவெளியில் சர்வீஸ் செய்ய வேண்டும்.

இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் அவ்வப்போது அதனை பராமரித்தல் அவசியம் ஆகும். இவ்வாறு செய்வதால், வாகனம் அடிக்கடி பழுதாகாது. ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள் அல்லது மொபட் போன்ற இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அதை பராமரிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது பெட்ரோல், ரிசர்வ் நிலையில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முன் பின் டயர்களில் சரியான அளவு காற்று இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும். டயர்களில் உள்ள சிறு சிறு கற்களை அகற்ற வேண்டும்.

ஆயிலுக்கு தனியாக டேங்க் இருந்தால் அதையும் சரி பார்க்க வேண்டும். பிரேக், கிளட்ச் ஆக்சிலேட்டர் சரியாக செயல்படுகிறதா? என்பதை சரி பார்க்க வேண்டும். ஹாரன், லைட் ஆகியவை சரியாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

வண்டியை உற்பத்தியாளர்களின் ஆலோசனைப்படி சர்வீஸ் செய்ய வேண்டும். பொதுவாக 2 ஆயிரம் கிலோமீட்டர் ஓடியதும் சர்வீஸ் செய்வது நல்லது. இதேபோல் உற்பத்தியாளர்கள் கொடுத்த ஆலோசனைப்படி என்ஜினிலும், கியர் பாக்சிலும் ஆயில் மாற்றம் செய்ய வேண்டும்.

எந்த சிறு பிரச்சினையையும் உடனடியாக கவனித்து ரிப்பேர் இருந்தால் சரி செய்து கொள்ள வேண்டும். இது அதிக சேதத்தை தவிர்க்க உதவும். அங்கீகாரம் பெற்ற டீலர் மற்றும் சர்வீஸ் நிலையங்களில் வாகனத்தை பழுது பார்க்கவும், சர்வீஸ் செய்யவும் வேண்டும்.

உதிரி பாகங்களை மாற்றும் போது போலியானவைகளை உபயோகிக்க கூடாது. தரமானவைகளையே பயன்படுத்த வேண்டும். மோட்டார்சைக்கிள், மொபட் ஸ்கூட்டர்களில் 2டி ஆயில்களை உபயோகிக்க வேண்டும். அவை தான் என்ஜின் ஆயுளை நீட்டிக்க செய்யும். லூஸ் ஆயில் உபயோகிப்பது என்ஜினுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கே.ஜி.எப் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ராம்சரண்

Next Post

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியதாக 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

Next Post

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியதாக 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures