Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லங்கா பிரீமியர் லீக் | 699 பேர் விண்ணப்பம்

October 12, 2021
in News, Sports
0
எல்பிஎல் T20 போட்டி: வீரர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்..!

எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ள லங்கா பிரீமியர் லீக் டி20 போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக 699 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்போட்டித் தொடருக்காக விண்ணப்பித்த  699 பேரில் ‍தெரிவு ‍செய்யப்படும் 225 வீரர்களை வகைப்படுத்தும் ‘வீரர்கள் வரைபு’ (player draft)  எதிர்வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதியன்று ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும்.

இப்போட்டித் தொடரில் பங்கேற்கும் குறித்தவொரு அணி அதிகபட்சமாக 6 வெளிநாட்டு வீரர்களை எடுத்துக்கொள்ள முடிவதுடன், விளையாடும் பதினொருவரில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களை பங்கேற்கச் செய்ய முடியும்.

இந்த போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெய்ல், அண்ட்ரே ரசல், டேவிட் மாலன், பாவ் டு பிளெஸ்ஸிஸ், இம்ரான் தாஹிர், ஷயிட் அப்ரிடி உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான இர்பான் பத்தான், யூசுப் பத்தான், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல், சகலதுறை வீரர் அண்ட்ரே ரசல், டுவெய்ன் ஸ்மித்,  இங்கிலாந்தின் லூக் ரைட், லியம் பிளங்கெட், ஸ்டீபன் பின், ஆதில் ரஷீட், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர்களான பகார் சமான், நியூஸிலாந்தின் மிச்செல் மெக்லனகன், ஸிம்பாப்வேயின் சிகந்தர் ராசா உள்ளிட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் வீரர்கள் இப்போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் கறுப்புச்சந்தை முதலாளிகளிடம்

Next Post

ஆசிரியர்-அதிபர் சம்பள விவகாரம் | பிரதமருடன் பேச்சுவார்த்தை இறுதி தீர்வின்றி நிறைவு

Next Post
அரசாங்க எதிர்ப்பு தொழிற்சங்கங்கள் இன்று மஹிந்தவுடன் சந்திப்புக்கு ஏற்பாடு

ஆசிரியர்-அதிபர் சம்பள விவகாரம் | பிரதமருடன் பேச்சுவார்த்தை இறுதி தீர்வின்றி நிறைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures