Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லெப்டினன் மாலதி | தீபச்செல்வன்

October 10, 2021
in News, கவிதைகள்
0
லெப்டினன் மாலதி | தீபச்செல்வன்
பள்ளி அப்பியாச புத்தகங்களின்
நடுவில் வீரப் படத்தை வைத்து
சிறுவர்கள் உருகியழைக்கும்
மாலதி அக்கா
 
ஈழ வீர மகள் அவள் பேசிக்கொண்டிருக்கவில்லை
உன்னைப் போல் கல்லாயிருக்கவில்லை
எழுந்தாள் தேசம் காக்க
தரித்தாள் ஆயுதம்
கோப்பாய் வெளியில் காயவில்லை அவள் குருதி
தொண்டைக்குழியில் நஞ்சு
‘என் துப்பாக்கியை எடுத்துச் செல்லுங்கள்!’
என்றுரைத்த அவள் இறுதிக் குரல்
இன்னும் ஓயவில்லை
 
போருக்குத் தீர்வு காண வந்தவும் படைகள்
தொடுத்தனர் போர்
அழிப்புக்கு அமைதிகாண வந்தவும் படைகள்
அழித்தனர் எமை
 
பாரத மாதாவே நீர் கல்லாயிருந்தீர்
களத்தில் அவள் மாண்டுபோகையில்
 
உம் கைகளிலிருந்த துப்பாக்கிகளில்
அசோகச் சக்கரம்
அமைதிப் படைகளின் முகத்திரையை
கிழித்தெறிந்தாள் முதல் சுடுகலனில்
 
வானமே கரைந்துருக
பூமியின் கண்களை நனைத்து
தாய் மண்ணை முத்தமிட்டது
முதல் விதை.
0
 
தீபச்செல்வன்
 
10.10.1987 தேசத்தின் விடுதலைக் கனவை சுமந்து ஆயுதம் ஏந்திக் களம் சென்று போரிட்டு மாண்ட மாலதி என்று அழைக்கப்படும் சகாயசீலி பேதுருப்பிள்ளை என்ற முதல் பெண் புலிக்காய்.
Previous Post

தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறிய 115 பேர் கைது

Next Post

சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டோம் | தாய்வான்

Next Post
சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டோம் | தாய்வான்

சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டோம் | தாய்வான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures