Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசியல் சூழ்ச்சியில் மைத்திரிபால | பொதுஜன பெரமுன கிளப்பும் சர்ச்சை

October 8, 2021
in News, Sri Lanka News
0
அரசியல் சூழ்ச்சியில் மைத்திரிபால | பொதுஜன பெரமுன கிளப்பும் சர்ச்சை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைதியாக இருந்தவாறு ஆசிரியர் -அதிபர் சம்பள பிரச்சினை தொடர்பில் அபயராம விகாரையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை அரசியல் சூழ்ச்சியாகும்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த தென்னகோன் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நல்லாட்சி அரசாங்கத்தில் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தான் நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

அக்காலக்கட்டத்தில் இவர் ஆசிரியர் -அதிபர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினை குறித்து கருத்துரைக்கவில்லை.

முன்னேற்றகரமாக எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. தற்போது இப்பிரச்சினை தொடர்பில் அவர் கருத்துரைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வுகாண அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

எதிர்வரும் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் ஊடாக பொருத்தமான தீர்வு வழங்கப்படும்.

இவ்வாறான நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவது குறித்து அரசாங்கமும், நாட்டு மக்களும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான பேச்சுவார்த்தை அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இப்பேச்சுவார்த்தையில் 13 தொழிற்சங்கத்தினரும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன,சுதந்திர கட்சியின்பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட முக்கிய பல தரப்பினர் கலந்துக் கொண்டனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 96 பேர் கைது

Next Post

ஒக்டோபர் 15 முதல் சுற்றலா பயணிகளின் வருகைக்கு இந்தியா அனுமதி

Next Post
ஒக்டோபர் 15 முதல் சுற்றலா பயணிகளின் வருகைக்கு இந்தியா அனுமதி

ஒக்டோபர் 15 முதல் சுற்றலா பயணிகளின் வருகைக்கு இந்தியா அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures