Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Health

பெண்களை தாக்கும் தசைநார் தேய்வு நோயின் அறிகுறிகள்

September 6, 2021
in Health, News
0
பெண்களை தாக்கும் தசைநார் தேய்வு நோயின் அறிகுறிகள்

தசைநார் தேய்வு எந்த வயதிலும் ஏற்படலாம். எனினும் குழந்தை பருவத்திலே அதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். இந்த நோய் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

தசை நார் தேய்வு பிரச்சினையால் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் அதிகரித்து வருகிறார்கள். உடலில் உள்ள தசை நார்களின் செயல்பாட்டுக்கு புரதத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. அதில் குறைபாடு ஏற்படும்போது தசை நார்கள் பலவீனமாகி விடும். அதன் காரணமாக உடலை தாங்கும் சக்தியை கால்கள் இழந்துவிடும். நாளடைவில் எழுந்து நடமாட முடியாத சூழ்நிலை உருவாகிவிடும்.

அத்தகைய பாதிப்புக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரிகள் ஆளாகி இருக்கிறார்கள். அவர்கள் பெயர்: ரேணு, நீது, சோனியா, இவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்தவர்கள். பள்ளிப்படிப்பின்போது ஒழுங்காக நடக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார்கள். உடலை தாங்கும் சக்தியை கால்கள் இழக்கத் தொடங்கி இருக்கிறது. அந்த சமயத்தில் தசை நார் தேய்வு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் சாதாரணமாக இருந்துவிட்டார்கள். அதுவே பின்னாளில் பாதிப்பை அதிகப்படுத்திவிட்டது. அதுபற்றி 43 வயதாகும் ரேணு சொல்கிறார்:-

‘‘15 வயதில் நான் பாதிக்கப்பட்டேன். அப்போது தசை நார் தேய்வு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் டாக்டர்களும் குழம்பி போனார்கள். என் உறவினர்களில் சிலர் நான் ரொம்ப பலவீனமாக இருப்பதாக கூறினார்கள். சிலர் காய்ச்சல் வந்ததால் இப்படி ஆகிவிட்டது என்றார்கள். கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தபோது என்னால் சரியாக நடக்க முடியவில்லை. என் கால்கள் தளர்ந்துபோனது. அதனால் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. படிப்பை பாதியில் நிறுத்திவிட எனக்கு மனமில்லை. எனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கான காரணத்தை அறிவதற்கு ஏராளமான டாக்டர்களை அணுகினேன். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை. உடலில் உள்ள தசைகள் பலவீனமாகி நிலைமை மோசமானது. எனக்கு ஏற்பட்டிருப்பது எந்த மாதிரியான பாதிப்பு என்பதை கண்டறிவதற்குள் உடல்நிலை கடும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது’’ என்கிறார், ரேணு.

ரேணுவுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த வேளையில் சகோதரிகள் நீதுவும், சோனியாவும் அதே போல் பாதிக்கப்பட்டார்கள். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டாலும் அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர மருத்துவம் கைகொடுக்கவில்லை. இப்போது மூன்று பேரும் சக்கர நாற்காலிகளின் உதவியுடன் தங்கள் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். ரேணுவும், நீதுவும் சேர்ந்து மாணவர்களுக்கு டியூசன் எடுக்கிறார்கள். சோனியா பட்டப்படிப்பை முடித்துவிட்டு பேஷன் டிசைனிங் பயிற்சியும் பெற்றிருக்கிறார்.

‘‘எனக்கு 24 வயதில் கால்கள் பலவீனமாக தொடங்கியது. ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றேன். ஆனால் வேலை கிடைக்கவில்லை. எங்களை போல் தசை பாதிப்பு பிரச்சினைக்குள்ளாகி இருப்பவர்களுக்கு தனி இடஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியில் சேர தகுதி இருந்தும் அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை’’ என்று கவலையுடன் கூறுகிறார், சோனியா.

தற்போது மூன்று பேரும் தசைநார் தேய்வு பாதிப்புக்கான சிகிச்சையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களை போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

தசைநார் தேய்வு எந்த வயதிலும் ஏற்படலாம். எனினும் குழந்தை பருவத்திலேஅதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். நடப்பதற்கு சிரமம், நிற்பதற்கு அசவுகரியம், சுவாச கோளாறு, பேசுவதற்கு சிரமம், அன்றாட வேலைகளுக்கே அடுத்தவர்களை சார்ந்திருக்கும் நிலை, தசைகள் பலவீனமாக இருப்பது, எலும்புகள் அடர்த்தி குறைவது, நுரையீரல் மற்றும் இதயம் பலவீனமாக இருப்பது உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் விழிப்பாக இருக்க வேண்டும். அது தசைநார் தேய்வு நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

http://Facebook page / easy 24 news

Previous Post

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், யானையை தத்தெடுத்தார் சிவகார்த்திகேயன்

Next Post

செர்ரி: புளிக்கும், இனிக்கும், சுவைக்கும்..

Next Post
செர்ரி: புளிக்கும், இனிக்கும், சுவைக்கும்..

செர்ரி: புளிக்கும், இனிக்கும், சுவைக்கும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures