Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய ஆட்சி அமைக்க தலிபான்கள் தீவிரம்- விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

August 23, 2021
in News, World
0
ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயர் மாற்றம் – தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவு, உடைகள் மற்றும் தினசரி தேவை பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து உள்ளது.

 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதால் அந்த நாட்டை 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். என்றாலும் ஆப்கானிஸ்தானில் சில மாகாணங்களில் தலிபான்களுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. தலிபான்களுக்கும், மாகாண குழுக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தலிபான்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக தலிபான் குழுக்களிடையே தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

தலிபான்களில் மூத்த தலைவர்களாக இருக்கும் 7 பேரில் ஒருவரை அதிபராக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தலிபான் தலைவர்கள் தற்போது காபூலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்த பிறகு புதிய ஆட்சி தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் முஜாகித் கூறுகையில், “ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைய இருக்கும் புதிய அரசு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்” என்று கூறினார்.

ஆப்கானிஸ்தானில் பஞ்ச்சீர் பள்ளத்தாக்கில் உள்ள குழுக்களுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள். அதில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டதும் புதிய ஆட்சி தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவு, உடைகள் மற்றும் தினசரி தேவை பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து உள்ளது. பர்தாக்களின் விலை 17 மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது. தலிபான்களின் எச்சரிக்கை காரணமாக பர்தா உடைகளுக்கு தேவை அதிகரித்து உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய தலிபான்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு தோழமையாக இருக்கும் நாடுகள் கூட விமான சேவையை ரத்து செய்து உள்ளன. ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தான் தற்காலிகமாக அனைத்து விமான சேவைகளையும் துண்டித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

http://Facebook page / easy 24 news

Previous Post

மதுரை புதிய ஆதீனம் இன்று பதவியேற்றார்

Next Post

டுவிட்டரில் ‘வலிமை’க்கு முதல் இடம்…. விஜய்யின் மாஸ்டருக்கு 2-வது இடம்

Next Post
டுவிட்டரில் ‘வலிமை’க்கு முதல் இடம்…. விஜய்யின் மாஸ்டருக்கு 2-வது இடம்

டுவிட்டரில் ‘வலிமை'க்கு முதல் இடம்.... விஜய்யின் மாஸ்டருக்கு 2-வது இடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures