Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காபுலில் போல இலங்கையிலும் மக்கள் நாட்டை ஓடும் நிலை உருவாகும்: சாணக்கியன்

August 18, 2021
in News, Sri Lanka News
0
காபுலில் போல இலங்கையிலும் மக்கள் நாட்டை ஓடும் நிலை உருவாகும்:  சாணக்கியன்

கோமாளிகள் ஆட்சி செய்யும் நிலையில் இவர்கள் அனைவரும் சேர்ந்து நாட்டு மக்களை பலிகொடுத்துவிட்டனர். தற்போது காபுலில் மக்கள் நாட்டை விட்டு தப்பி செல்வதை போன்று எதிர்காலத்தில் இலங்கையிலும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் நாட்டை விட்டு தப்பி செல்லும் நிலை உருவாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, வைரஸ் தொற்று (கொவிட்-19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்.

தற்போது அமைச்சரவை மாற்றமொன்று செய்யப்பட்டுள்ளது, இதனை பார்க்கும் போது சீட்டுக் கட்டு விளையாட்டு நினைவுக்கு வருகின்றது. இதில் கோமாளிகள் இரண்டும் இருக்கும். அந்த இரண்டு கோமாளிகளையும் ஒதுக்கிவிட்டே சீட்டுக்கட்டு பிரிக்கப்படும். அதேபோன்று தான் தற்போது அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தனது அமைச்சு மாற்றப்பட்டதற்காக ஒப்பாரி வைக்கின்றார். அவருக்கே தெரியாது அவரது அமைச்சுப்பதவி பறிபோனதாக தெரிவிக்கின்றார். கோமாளிகளே இவ்வாறான தீர்மானம் எடுத்துள்ளனர். இந்த நாட்டை ஆட்சி செய்வதும், தீர்மானங்கள் எடுப்பதும் கோமாளிகள் என்றே கூற வேண்டும்.

அதேபோல் பலி கொடுப்பது குறித்தும் அவர் கதையொன்றை கூறியுள்ளார். ஆனால் உண்மையில் இவர்கள் அனைவரும் சேர்ந்து நாட்டு மக்களையே பலிகொடுத்து வருகின்றனர். அண்மையில் காபுலில் இருந்து விமானம் ஒன்றில் தப்பி செல்லும் பொதுமக்களில் ஒருவர் கீழே விழுந்து இறப்பதை பார்த்தேன். இன்னும் சிறிது காலம் போனதும் இலங்கையிலும் ஆட்சி ஆட்சி செய்யும் முறைமையை பார்த்தல் காபுலில் மக்கள் விமானங்களில் தப்பி செல்வதை போன்று நிச்சயமாக இங்கேயும் ஒரு நிலைமை உருவாகும்.

தமிழ் மக்கள் மட்டுமே நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறும் ஒரு காலம் இருந்தது. ஆனால் எதிர்காலத்தில் சிங்கள, தமிழ்இ முஸ்லிம் என சகலரும் அகதிகளாக வெளியேறும் நிலையொன்று உருவாகும். ஏனென்றால் இந்த நாட்டின் ஆட்சி முறைமை அவ்வளவுக்கு தோல்வி கண்டுள்ளது என்றே கூறியாக வேண்டும் என்றார்.

_____________________________________________________________________________

 http://Facebook page / easy 24 news 

Previous Post

நைரோபியில் இன்று ஆரம்பமாகவுள்ள உலக இளையோர் மெய்வல்லுநர் போட்டி

Next Post

சிறுவர்களின் பயன்பட்டுக்காக மொடர்னா தடுப்பூசிக்கு பிரிட்டன் அனுமதி

Next Post
சிறுவர்களின் பயன்பட்டுக்காக மொடர்னா தடுப்பூசிக்கு பிரிட்டன் அனுமதி

சிறுவர்களின் பயன்பட்டுக்காக மொடர்னா தடுப்பூசிக்கு பிரிட்டன் அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures