Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழர் படுகொலையில் ஐ.நா.வின் தவறுக்கு பான் கீ மூனின் பதில் என்ன?

September 2, 2016
in News, Politics
0
தமிழர் படுகொலையில் ஐ.நா.வின் தவறுக்கு பான் கீ மூனின் பதில் என்ன?

தமிழர் படுகொலையில் ஐ.நா.வின் தவறுக்கு பான் கீ மூனின் பதில் என்ன?

2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம் இந்த நாட்டில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கினாலும் தமிழர்கள் விடயத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

கடந்த ஆட்சியில் நடந்த அதே நீதி நிர்வாகங்களே இந்த ஆட்சியிலும் நடைபெற்றுவருகின்றது.

சிங்கள அரசிற்கு எதிராக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை நல்லிணக்கம் என்ற போர்வையில் பங்காளியாக மாற்றிய நல்லாட்சி அரசு, தமிழர்களுக்கு யுத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அநீதிகளுக்கு இன்னும் தீர்வை வழங்கவில்லை.

மீள்குடியேற்றம், அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, கல்வி, வளப்பகிர்வு உள்ளிட்ட அனைத்திலும் தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகின்றது.

அரசாங்க அதிகாரிகள் மாகாண ஆளுநர்கள் ஆகியோர் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களை விட அதிகாரம் படைத்தவர்களாக உள்ளதுடன், அவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளாக உள்ளமையானது தமிழ் மக்கள் தொடர்ந்தும் தங்களது நிலங்களில் இரண்டாம்தரப் பிரஜைகளாக வாழ்வதற்கு காரணமாக உள்ளது.

இது தமிழ் மக்கள் மத்தியில் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இல்லாதொழித்துள்ளது.

ஐ.நா. மற்றும் இலங்கை அரசுமீதான விமர்சனங்கள்

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் நடந்துகொண்ட விதம் குறித்த விமர்சனங்களும், அதனூடாக ஐ.நா மீதான நம்பிக்கை அற்றதன்மையும் தமிழ் மக்கள் மத்தியில் ஆழப்பதிந்துள்ளது.

இறுதி யுத்தத்தில் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடியதுமான அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபையையே தமிழ் மக்கள் நம்பியிருந்தனர்.

ஆனால் அந்த நம்பிக்கையை ஐ.நா இல்லாமல் செய்ததுடன், அதற்கான பரிகாரத்தையும் ஐ.நா செய்யத்தவறியுள்ளது என்ற குற்றச்சாட்டு இன்றும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.

தங்களது மக்களின் படுகொலைகளில் ஐ.நாவின் பங்கும் இருந்துள்ளது என்பதை தமிழ் மக்கள் கருதுகின்றனர். இது சர்வதேச ரீதியாக ஐ.நா அமைப்புக்கு ஏற்பட்ட அவப்பெயர் என்பதோடு, அது ஏற்படக்காரணமான எந்த விசாரணைகளையும் ஐ.நா கண்டறிந்ததாக தெரியவில்லை.

மாறாக இலங்கை அரசுடன் இணைந்து மீண்டும் பெயரளவிலான அதாவது இறுதி யுத்தத்தின் போது எவ்வாறு மக்கள் கொல்லப்படவில்லை என்று அரசு கூறியதோ அதை எவ்வாறு ஐ.நா நம்பிக்கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதோ அதைப்போன்று தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் நல்லிணக்க செயற்பாடுகளையும் ஐ.நா நம்பிக்கொண்டிருப்பது மிகுந்த ஆபத்தானது.

அரசாங்கத்தை பொறுத்தமட்டில் தங்களது நாட்டிற்கு சர்வதேச ரீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை கலைந்து சர்வதேச நீதிப்பொறிமுறைகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கான கட்டமைப்புக்களை உருவாக்குகின்றதே தவிர, அதனை நீதியாகவும் நியாயமாகவும் உண்மைத்தன்மை கொண்டதாகவும் செயற்படுத்துவதில் எந்த அக்கறையும் காட்டியதாக தெரியவில்லை.

எனவே, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற எந்த செயற்பாட்டையும் நடுநிலையாக நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை. இந்த நாட்டில் உள்ளகப்பொறிமுறை என்பது பொய்த்துப்போன ஒன்றாகவே உள்ளது.

எனவே நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து விடயங்களையும் சர்வதேச கண்காணிப்பின் ஊடாக செயற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையினை தமிழர்கள் பான் கீ முனிடம் முன்வைக்கவுள்ளனர்.

முள்ளிவாய்காலில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டது குறித்து ஐ.நா மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கும் அது குறித்து ஐ.நா ஏன் விசாரணைகளை நடத்தவில்லை என்பதற்கான பதிலை பான்கீ முன் வடகிழக்கு தமிழர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை இலங்கை விடயத்தில் விட்ட மிகப்பெரிய மனிதாபிமானத் தவறை இனிமேல் விடாதிருப்பதற்கு ஐக்கியநாடுகள் சபை மேற்கொண்ட மேற்கொள்ள இருக்கின்ற நடவடிக்கைகள் குறித்து தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தி நடந்த கொலைகளுக்கு மன்னிப்பும் வருத்தமும் பான்கீ மூன் தெரிவிக்கவேண்டும் என்பதே பெரும்பான்மை தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இலங்கையில் நடந்த தவறுகளுக்கு பான்கீ மூனின் பதில் என்னவாக இருக்கப்போகின்றது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Tags: Featured
Previous Post

அடேங்கப்பா..! அடித்து நொறுக்கும் ரிலையன்ஸ் ஜியோ சேவை: இதோ முழுவிவரம்

Next Post

இராணுவத்தை காட்டிக்கொடுக்கவே பான் கீ மூனின் வருகை – உடனே அவரை வெளியேற்ற வேண்டும்!

Next Post
இராணுவத்தை காட்டிக்கொடுக்கவே பான் கீ மூனின் வருகை – உடனே அவரை வெளியேற்ற வேண்டும்!

இராணுவத்தை காட்டிக்கொடுக்கவே பான் கீ மூனின் வருகை - உடனே அவரை வெளியேற்ற வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026

Recent News

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures