Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மியன்மாருக்கு ஆயுதங்களை நிறுத்த ஐ.நா பொதுச் சபை அழைப்பு

June 20, 2021
in News, World
0

மியன்மார் மீதான ஆயுதத் தடை குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரபட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தல் முடிவுகளை மதிக்கவும், தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுவிக்கவும் அந்நாட்டு இராணுவத்தை வலியுறுத்தியுள்ளது.

இராணுவ ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்று நான்கு மாதங்களுக்குப் பின்னர் 119 நாடுகளின் ஆதரவுடன் பொதுச் சபை, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

குறித்த தீர்மானத்தை பெலரஸ் மட்டுமே எதிர்த்த நிலையில் சீனா, ரஷ்யா உட்பட 36 நாடுகள் குறித்த வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்த அதேவேளை 37 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

பெப்ரவரி முதலாம் திகதி இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் இராணுவதினரால் 860 க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் மீதான கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் எடுத்துரைத்துள்ளது.

http://Facebook page / easy 24 news

Previous Post

கொவிட் -19இற்கு இடையில் காஷ்மீரில் வருடாந்த ‘கீர் பவானி மேளா’

Next Post

பயணக் கட்டுப்பாடுகள் நாளை நீக்கம்: பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

Next Post

பயணக் கட்டுப்பாடுகள் நாளை நீக்கம்: பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures