Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ; இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 146/3

June 20, 2021
in News, Sports
0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ; இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 146/3

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களை குவித்துள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது.

மழை காரணமாக நாணய சுழற்சி கூட மேற்கொள்ளப்படாது முதல் நாள் ஆட்டம் இரத்து செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் நேற்யை தினம் இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பிக்க, நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சின் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் ஆடுகளும் நுழைந்தனர்.

இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், கிடைத்த சந்தர்ப்பத்தில் பவுண்டரிகளும் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 62 ஓட்டங்களை சேர்த்தது.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 62 ஆக இருக்கும்போது ரோகித் சர்மா 34 ஓட்டங்களில் ஜேமீசனின் பந்து வீச்சல் டிம் சவுதியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தாமர். அவரை தொடர்ந்து சுப்மன் கில்லும் 28 ஓட்டங்களுடன் நீல் வாக்னரின் பந்து வீச்சில் பிடிகொடுத்தார்.

அடுத்து வந்த பொறுமையின் சிகரம் புஜாரா 8 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

பின்னர் நான்காவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் விராட் கோலி மற்றும் ரஹானே ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்பான இணைப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 146 ஆக இருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் போட்டி நிறைவு நேரத்துக்கு முன்பே இடைநிறுத்தப்பட்டது.

இரண்டாம் நாள் நிறைவில் இந்தியா 66.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களை எடுத்துள்ளது. விராட் கோலி 44 ஓட்டததுடனும், ரஹானே 29 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

நியூசிலாந்து சார்பில் போல்ட், ஜேமீசன் மற்றும் வாக்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இன்று போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும்.

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கறுப்பு பட்டி அணிந்து விளையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஜப்பான் சென்ற உகாண்ட ஒலிம்பிக் குழு உறுப்பினருக்கு கொரோனா

Next Post

கொவிட் -19இற்கு இடையில் காஷ்மீரில் வருடாந்த ‘கீர் பவானி மேளா’

Next Post

கொவிட் -19இற்கு இடையில் காஷ்மீரில் வருடாந்த 'கீர் பவானி மேளா'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures