Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சூரியன் வழிபடும் சிவன் கோவில்

June 14, 2021
in News, ஆன்மீகம்
0

கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேயில் உள்ள அம்ருதாபுரா அம்ருதேஸ்வரா கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ரத சப்தமி அன்று சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி வீசும் அதிசயம் நிகழ்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ரத சப்தமி அன்று சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி வீசுகிறது. இத்தகைய அதிசயம் அம்ருதாபுரா அம்ருதேஸ்வரா கோவிலில் தான் நிகழ்கிறது. இது கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேயில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது.

கி.பி.1196-ம் ஆண்டு ஒய்சாலா மன்னர் அமித்தையாவால் அழகிய சிற்பக்கலையுடன் இக்கோவில் கட்டப்பட்டது. கிழக்கு முகம் நோக்கி அமைந்துள்ள இந்த கோவிலின் நடுவில் சிவன் சன்னதியும், வலதுபக்கம் விஷ்ணு சன்னதியும், இடதுபக்கம் பிரம்மன் சன்னதியும் உள்ளது. கோவில் கருவறையில் குடிகொண்டிருக்கும் சிவன் சிலை மிகவும் பிரசித்திப்பெற்றது ஆகும்.

அதாவது அக்னி சிவன் எனப்படும் இந்த சிவன் சிலை மும்மூர்த்திகளின் சக்தி அடங்கியது என கூறப்படுகிறது. இந்த சிவன் சிலையானது நேபாளத்தில் உள்ள கன்டக்கி நதியில் இருந்து கொண்டு வரப்பட்டு, சங்கராந்தி (பொங்கல்) அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு அம்ருதேஸ்வரா என்று பெயர் சூட்டப்பட்டது என்று தலவரலாறு கூறுகிறது.

http://Facebook page / easy 24 news

Previous Post

இரத்த சோகையை குணமாக்கும் கறிவேப்பிலை இடிச்ச பொடி

Next Post

பிரதோஷ காலத்தில் சிவனை வழிபாடுவதால் கிடைக்கும் பலன்கள்…

Next Post

பிரதோஷ காலத்தில் சிவனை வழிபாடுவதால் கிடைக்கும் பலன்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures