Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சமூக வலைத்தள மோசடிக்காரர்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை

June 9, 2021
in News, Sri Lanka News
0
பேஸ்புக் சமூக வலைத்தலங்கள் தொடர்பில் 2500 முறைப்பாடுகள்

சமூக வலைத்தள மோசடிக்காரர்கள் பொது மக்களுக்கு தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்டு, நீங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்து பண மோசடியில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறான மோசடிக்காரர்கள் பொலிஸார், பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மற்றும் குற்ற விசாரணைப் பிரிவினர் எனத் தெரிவித்தே அழைப்பினை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் பொது மக்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதன்போது தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்படும் நபருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புள்ளது என்றும், அதற்கான சாட்சிகள் தம்மிடம் இருப்பதாகவும் மோசடிகக்காரர்களார் தெரிவிக்கப்படும்.

இது தொடர்பில் வீடுகளில் வந்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக போக்குவரத்து செலவிற்காக 20 000 – 30 000 ரூபாய் பணம் வைப்பிடலிடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படும்.

அவர்கள் கூறுவதைப் போன்று போக்குவரத்திற்கான பணத்தை வைப்பிலிடாவிட்டால், பொலிஸ் நிலையம், பயங்கரவாத விசாரணைப்பிரிவு அல்லது குற்ற விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்று மோசடிக்காரர்களால் எச்சரிக்கை விடுக்கப்படும்.

இவ்வாறான செயற்பாடுகள் மோசடிக்காரர்களாலும் சிறைச்சாலைகளிலுள்ளகைதிகளாலும் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக பண மோசடிகள் பல இடம்பெறுகின்றமை தொடர்பில் தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சமூக வலைத்தளங்களுக்கு, மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது தொலைபேசிக்கு அதிஷ்ட சீட்டு மூலம் பணம் அல்லது பரிசு கிடைத்துள்ளதாகவும், வெளிநாடுகளிலிலுள்ள உறவினர்கள் அன்பளிப்புக்களை அனுப்பியுள்ளதாகவும் போலியான குறுந்தகவல்கள் வரக்கூடும்.

இவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் இதன் போது கூறப்படும். இவை அனைத்தும் சமூக வலைத்தள மோசடிக்கார்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளாகும்.

எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான மோசடிக்காரர்களின் அறிவிப்புக்களுக்கு ஏமாறாக வேண்டாம் என்றும் , பணத்தை வைப்பிலிடவோ அவர்களுக்கு வழங்கவோ வேண்டாம் என்றும் பொது மக்களை அறிவுறுத்துகின்றோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்று உலக சாதனை செய்த தாய்!

Next Post

கொரோனா ஊரடங்கும் குடும்ப உறவுகளும்

Next Post

கொரோனா ஊரடங்கும் குடும்ப உறவுகளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures