Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.சி.சி.யின் மெய்நிகர் கூட்டதில் எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள்

June 2, 2021
in News, Sports
0

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் ஆண்கள் கிரிக்கெட்டுக்கான உலகளாவிய நிகழ்வுகளை விரிவாக்குவதாக அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஐ.சி.சி.யின் மெய்நிகர் கூட்டதின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி 8 அணிகள் கொண்ட சாம்பியன்ஸ் டிராபி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு 2024 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் விளையாடப்படும் என்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது 16 அணிகளுடன் விளையாடும் டி-20 உலகக் கிண்ணம் 2024-31 சுழற்சியில் 20 அணிகளாக விரிவுபடுத்தப்படும். குறிப்பிட்ட காலப்பகுதியில் 4 டி-20 உலகக் கிண்ண போட்டிகள் விளையாடப்படும்.

2019 ஆம் ஆண்டில் 10 அணிகள் பங்கெடுத்த 50 ஓவர் உலகக் கிண்ணம் 2027 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் 14 அணிகளாக விரிவுபடுத்தப்படும்.

2027-2031 உலகக் கிண்ணம்:

2027 மற்றும் 2031 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 14 அணிகளைக் களமிறக்க ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது.

இதற்கான போட்டிகளில் எண்ணிக்கையை 54 ஆக நிர்ணயித்துள்ளது.

14 அணிகள் இரு குழுக்களாகப் பிரிந்து மோதவுள்ளன. இரு குழுவிலும் டாப் 3 இடம் பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். அதனைத் தொடர்ந்து அரையிறுதி, இறுதிப் போட்டிகள் நடைபெறும்.

இதற்குமுன் 2003 ஆம் ஆண்டு இதே விதிமுறைகளுடன் உலகக் கிண்ணம் நடத்தப்பட்டது.

டி-20 உலகக் கிண்ணம்:

2024, 2026, 2028 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் டி-20 உலகக் கிண்ணத் தொடரை நடத்த ஐ.சி.சி திட்டமிட்டுள்ளது.

இதற்கான போட்டிகளில் எண்ணிக்கை 55 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் 2017 ஆம் ஆண்டோடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரை 2025, 2029ஆம் ஆண்டுகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்:

2019 ஆம் ஆண்டுமுதல் 2021 ஆம் ஆண்டுவரை நடத்தப்படும் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனால் இத்தொடரை அடுத்தடுத்து நடத்த ஐ.சி.சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

2025, 2027, 2029, 2031 ஆம் ஆண்டுகளில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 டி-20 உலகக் கிண்ணம் :

2021 டி-20  உலகக் கிண்ணம் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியதால், டி-20  உலகக் கிண்ணத்தை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

இது குறித்து ஐ.சி.சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய சவுரவ் கங்குலி, “இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் டி-20  உலகக் கிண்ணத்தை இங்கு நடத்துவதில் சிக்கல் இருக்காது. எங்களுக்கு போதிய அவகாசம் கொடுத்தால் சரியான திட்டங்களை வகுத்து உங்களுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

இதற்கு ஐசிசி சம்மதம் தெரிவித்து, ஜூன் 28 ஆம் திகதி வரை அவகாசம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

http://Facebook page / easy 24 news

Previous Post

திருமணப்பதிவுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது

Next Post

உத்தரபிரதேச அனுமன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Next Post

உத்தரபிரதேச அனுமன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026

Recent News

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures