Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான விவாதம்

May 19, 2021
in News
0

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான விவாதம் இன்று (19) நாடாளுமன்றில் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்த விவாதத்தின் பின்னர், நாளை பிற்பகல் 4 மணிக்கு குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில், கலந்துரையாடுவதற்கான விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது.

கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை, பிரதமநீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில், கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகி, 23ஆம் திகதி நிறைவடைந்தது.

இந்தநிலையில், உயர்நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதனை அவர் நேற்று சபையில் அறிவித்தார்.

இதன்படி இன்று ஆரம்பமாகின்ற நாடாளுமன்ற விவாதத்தின் போது, அரசாங்கம் குறித்த சட்டமூலத்திற்கான திருத்தங்களையும் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

விதிகளை மீறிய 340 பேர் கைது

Next Post

1,904 பேருக்கு பதவி உயர்வு

Next Post

1,904 பேருக்கு பதவி உயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures