Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சூயஸ் கால்வாயூடான போக்குவரத்து ஆரம்பம்

March 30, 2021
in News, Politics, World
0

ஏறக்குறைய எகிப்தின் சூயஸ் கால்வாயூடான போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.

சுமார் ஒரு வாரமாக ஒரு கொள்கலன் கப்பல் சூயஸ் கால்வாயுடனான போக்குவரத்தினை தடுத்து நிறுத்தியிருந்தது.

எனினும் 400 மீட்டர் நீளம் (1,300 அடி) கொண்ட எவர் கிவன் என்ற குறித்த கப்பல் திங்களன்று அகழ்வாராய்ச்சி மற்றும் இழுபறி படகுகளின் உதவியுடன் சிக்கலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமையினால் சூயஸ் கால்வாயுடனான போக்குவரத்து மீண்டும் ஆரம்பாகியுள்ளது.

பனமேனியக் கொடியிடப்பட்ட சரக்குக் கப்பலான எவர் கிவன் கடந்த செவ்வாய்க்கிழமை எகிப்தின் சூயஸ் கால்வாய் எதிர்பாராத விதமாகத் சிக்குண்டது.

200,000 டொன் எடையுள்ள கப்பலை விடுவிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் முன்னர் தோல்வியடைந்தன.

இதனால் மத்தியதரைக் கடலை செங்கடலுடன் இணைக்கும் கால்வாய் வழியாகச் செல்ல நூற்றுக்கணக்கான (369) கப்பல்கள் காத்திருந்தன.

இந் நிலையில் உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 04:40 மணிக்கு மீட்புக் குழுக்களால் கப்பல் சிக்கலிலிருந்து விடுவிக்கப்பட்டது என்று அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

அதன் பின்னர் தற்காலிகமாக மூடப்பட்ட நீர்வழி பாதை மாலை 6 மணிக்கு மீண்டும் தொடங்குவதாக சூயஸ் கால்வாய் ஆணையம் அறிவித்தது.

உள்ளூர் நேரம், வர்த்தக வழியை மறுதொடக்கம் செய்வது பாரிய கப்பல் மற்றும் வர்த்தக தாமதங்களைத் தூண்டியது.

சூயஸ் கால்வாய் உலகின் பரபரப்பான வர்த்தக பாதைகளில் ஒன்றாகும்.

224,000 டொன், 400 மீட்டர் நீளம் (1,300 அடி) கொள்கலன் கப்பலா எவர் கிவன், சீனாவிலிருந்து நெதர்லாந்திற்கு செல்லும் வழியில் பலத்த காற்று மற்றும் மணல் புயல்களினால் பாதிக்கப்பட்டு கால்வாயில் சிக்குண்டது.

உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதம், சுமார் ஒரு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் மற்றும் சுமார் 8 சதவீத திரவ இயற்கை எரிவாயு ஒவ்வொரு நாளும் சூயஸ் கால்வாய் வழியாக செல்கின்றன.

கால்வாயின் வருவாய் ஒவ்வொரு நாளும் 14- 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொடுக்கிறது. தொற்றுநோய்க்கு முன்னர், சூயஸ் கால்வாய் வழியாக வர்த்தகம் எகிப்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீத பங்களிப்பினை வழங்கியதாக சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஒசாமா ராபி சனிக்கிழமை கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்தை தாண்டியது

Next Post

உயிருக்கு ஆபத்து பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்- சந்திரிகா

Next Post

உயிருக்கு ஆபத்து பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்- சந்திரிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures