Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்மீது கொழும்பு ஆங்கில ஊடகம் பாய்ச்சல்

March 19, 2021
in News, Politics, World
0

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்பதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிர முனைப்புக் காட்டிவருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது, ஜெனீவா விடயத்தில் இலங்கைக்கு பெரும் சவாலாக உள்ளதென அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அடுத்தவாரம் இலங்கைக்கு ஒரு சவாலான காலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்களுக்காக நாட்டை கேள்விக்கு உட்படுத்தும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற மேற்கத்தேய நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றன எனவும் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் உரைக்குப் பதிலுரையாக அமைந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் அறிக்கை சவாலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை தொடர்பாக வாக்கெடுப்பினை நோக்கிச் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென கூட்டு நாடுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரித்தானிய அரசாங்கத்தின் தடைக்கு எதிராகவும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வித பயங்காரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாதிடுகின்றது என்பதை குறித்த ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இலங்கை தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும்  திங்களன்று வாக்கெடுப்புக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகளின் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு 47 உறுப்பு நாடுகள் வாக்களிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

விவசாய அபிவிருத்திக்காக வன்னியில் மூவாயிரம் மில்லியன் நிதி ஒதுக்கீடு

Next Post

பங்களாதேஷ் சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச

Next Post

பங்களாதேஷ் சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures