Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தடுப்பூசி ஏற்றிய எவருக்கும், இதுவரை குருதி உறைவு இல்லை, அச்சப்படத் தேவையில்லை – Dr சுதர்ஷனி

March 18, 2021
in News, Politics, World
0

இலங்கையில் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டுள்ள எவருக்கும் இரத்த உறைவுகள் ஏற்படவில்லை என்பதால் எவரும் அச்சப்படத்தேவை யில்லையென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்தார்.

 

அத்துடன், சீனாவில் தயாரிக்கப்படும் சைனோபாம் தடுப்பூசிக்கு அனுமதியளிப்பதற்கான தகவல்கள் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதுடன், 06 இலட்சம் தடுப்பூசிகள் முதல் கட்டமாக இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாகவும் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தாவது,

தடுப்பூசிகள் ஏற்றப்படுவதால் இரத்த உறைவுகள் அல்லது பக்க விளைவுகள் ஏற்படுவதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு எவ்வித இரத்த உறைவுகளும் விளைவுகளும் எமது நாட்டில் ஏற்படவில்லை. தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரான மதிப்பீடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதில் இரத்த உறைவுகள் ஏற்பட்டுள்ளதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர் பக்க விளைவுகள் வருகின்றனவா? எந்த எந்த தரப்பினருக்கு பக்கவிளைவுகள் வருகின்றன? ஒரே குழுக்களை சேர்ந்தவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றனவா? என்ற அடிப்படையில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலக சுகாதார ஸ்தாபனமும் இந்த தடுப்பூசி தொடர்பில் தமது மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. இதில் இரத்த உறைவுகள் ஏற்படுவதாக கூறப்படவில்லை. ஆகவே, தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள எவரும் அச்சப்படத்தேவையில்லை.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் – வி தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவரும் செயற்பாட்டை எஸ்.பி.சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அத்துடன், சீனாவில் தயாரிக்கப்படும் சைனோபாம் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிப்பதற்கான தகவல்களும் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபைக்கு அனுப்பட்டுள்ளன. அது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு அறிக்கைககள் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்பதுடன், சீன அரசாங்கத்தால் 06 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Previous Post

முஸ்லிம்க‌ளை குற்ற‌ம்சொல்லும் சில‌ அமைச்ச‌ர்க‌ளால் அர‌சுக்கு நெருக்க‌டி

Next Post

மன்னிப்புக் கோரினார் அர்ஜுன ரணதுங்க

Next Post

மன்னிப்புக் கோரினார் அர்ஜுன ரணதுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures