2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஈழவிடுதலைப்போராட்டத்துக்கு ஒரு சரியான தலைமை இருந்தமையால் அதன் செயற்பாடுகள் தங்குதடையின்றி மக்கள் நலன்சார்ந்து பொங்கி பிரவாகித்தது .
ஆனால் தற்போது ஈழப்போராட்டம் மக்கள் மயப்பட்டு எந்தவித நல்ல நோக்கமும் பாதையும் இன்றி தவிக்கிறது .
தாயகத்திலும் புலத்திலும் இருப்பவர்கள் தங்கள் நலன்சார்ந்தே ஈழப்போராட்டத்தின் தொடர்ச்சியை அணுக முனைகின்றமை வருத்தமளிக்கும் செயற்பாடாகும் .
எப்போது பொதுப்படையாக மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு எம் புலத்து சமூகம் செயற்பட விளைகின்றதோ அன்றுதான் நமக்கான விடுதலை கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை .

