கிளிநொச்சி வட்டக்கச்சி ஒற்றக்கை பிள்ளையார் ஆலய பகுதியில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் தாய் ஒருவர் குதித்த நிலையில் தாய் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இதில் உயிரிழந்த ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய குழந்தைகளின் உடல்களை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி என்ற பகுதியில் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது.
இதன்போது 8 வயது 5 வயது 2 வயது உடைய ஒரு ஆண் பிள்ளையும் இரண்டு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக அறியமுடிகின்றது.
குறித்த சிறுவர்கள் அணிந்து சென்ற பாதணிகள் மற்றும் தொப்பி என்பன கிணற்றுக்கு அருகில் காணப்படுகின்றன. அத்துடன் கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் பணிகள் இடம்பெறவுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

