Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைக்கு எதிரான பிரேரணை வலுமிக்கதாக இருக்க வேண்டும் – சுமந்திரன்

February 25, 2021
in News, Politics, World
0

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணைக்குப் பின்னால் இருந்து அமெரிக்கா செயற்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் நேற்று தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்களாகத் தங்கியிருந்த அமெரிக்கத் தூதுவரைக் கொழும்புக்கு அழைத்துச் செல்வதற்காகப் பலாலியில் வந்திறங்கிய விமானத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் வந்திறங்கினார். அவ்வேளை அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குப் பயணிக்க விமான நிலையத்துக்கு வந்திருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் அரை மணி நேரம் விமான நிலையத்தில் இருவரும் சந்தித்து உரையாடினர். இதன்போதே அமெரிக்க தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.

குறித்த சந்திப்பின்போது மேலும் பல விடயங்கள் உரையாடப்பட்டன.

இம்முறையும் இலங்கை தொடர்பான ஒரு பிரேரணை வருவது மிகவும் இன்றியமையாதது .இருப்பினும் அதன் உள்ளடக்கம் தொடர்பான சர்ச்சைகளுக்கு அப்பால் பிரேரணை கண்டிப்பாக வலுமிக்கதாக வர வேண்டும் என்று அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார் என அறியமுடிந்தது.

Previous Post

வயோதிப் பெண்ணைத் தாக்கி நகைகளை கொள்ளை

Next Post

வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

Next Post

வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures