மட்டக்களப்பு காத்தான்குடி நகரில் காவல்துறையினரின் விசேட சோதனை நடவடிக்கை நேற்று (23) மாலையில் இடம்பெற்றது. இதன்போது வீதிகளில் முககவசம் அணியாது பயணித்த சுமார் 50 மேற்பட்டேரை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு உபதேசம் வழங்கி எச்சரித்து அங்கிருந்து அனுப்பினர்
காத்தான்குடி காவல்நிலைய நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நளனசிறி தலைமையில் காவல்துறை குழுவினர் இந்த திடீர் விசேட சோதனை நடவடிக்கை நேற்று மாலை 6 மணிக்கு காத்தான்குடிநகர் சிக்கினல் சந்தில் சந்தியில் மேற்கொண்டனர்
இதன்போது வீதியால் மோட்டர்சைக்கில் முச்சக்கரவண்டி போன்ற வாகனங்களில் முகக்கவசம் அணிதாது பிரயாணித்த சுமார் 50 மேற்பட்டோரை பிடித்து சுமார் அரைமணிநேரம் தடுத்துநிறுத்தினர். இதன் பின்னர் பொது சுகாதார அதிகாரி மற்றும் காவல்துறை நிலைய பெறுப்பதரிகாரி அவர்களுக்கு உபதேசம் வழங்கி முககவசம் அணியாது பிரயாணித்தால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என எச்சரித்து அவர்களை விடுவித்தனர்.

