Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இம்ரான் கானின் இலங்கை நாடாளுமன்ற உரை இரத்து – கொரோனா பரவல் அபாயம்

February 18, 2021
in News, Politics, World
0

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த இருந்த நிலையில், அது இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது, அவர் நாடாளுமன்றத்திலும் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய ரக பரவல் தீவிரமடைந்துள்ளதைக் கருத்தில்கொண்டே, பாகிஸ்தான் பிரதமரின் உரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்ரான் கான் எதிர்வரும் 22ஆம் திகதி இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.

இலங்கையின் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமரை உரையாற்ற அனுமதிப்பது, இந்தியாவுடனான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசின் சில உறுப்பினர்கள் கருதியதால், இந்த உரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது எனவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்ரான் கான் எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

இந்தியாவில் உள்ள ‘விக்னேஸ்வரன்’களின் பேச்சே இது – வீரசேகர

Next Post

இரு தரப்பும் நன்மையடையும் வகையில் தீர்வு – இந்தியத் தூதரகம் பதிலடி

Next Post

இரு தரப்பும் நன்மையடையும் வகையில் தீர்வு – இந்தியத் தூதரகம் பதிலடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures