Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறுவர் முறைப்பாடுகளுக்கு தீர்வு இல்லை!

February 16, 2021
in News, Politics, World
0

2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி வரையில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்றுள்ள 89,405 முறைப்பாடுகளில் 40,668 முறைப்பாடுகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை என அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்ற குழுவான கோப் குழுவில் தெரியவந்துள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கோப் குழுவின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையால் 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக 3165 பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றில் தற்போது 2392 குழுக்கள் மாத்திரமே இயங்கும் நிலையில் காணப்படுகின்றன.

அத்துடன் முறைப்பாடுகள் தொடர்பிலான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக சட்டத்தை அமுலாக்கும் பிரிவில் ஒரு குழு மாத்திரமே கடமையாற்றி வருகின்றமை கவலைக்குரிய விடயம் என கோப் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

மாநகரசபை ஆணையாளரின் கடமையை சபை குறைத்தமைக்கு எதிர்ப்பு

Next Post

இந்தியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 109 இலட்சத்தை தாண்டியது

Next Post

இந்தியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 109 இலட்சத்தை தாண்டியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures