Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

துள்ளிக் குதிக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

February 11, 2021
in News, Politics, World
0

ஜனாஸா நல்லடக்கத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்ற பிரதமர் மஹிந்தவின் அறிவிப்பை அடுத்து, 20 க்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இப்போது துள்ளிக் குதிக்கத் தொடங்கியுள்ளார்கள் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ஒரேயொரு சொல்லை பிடித்துக்கொண்டு, அதற்கு கை, கால், முகம் வைத்து, உருவம் அமைத்து, அறிக்கை விட்டு, தம்பட்டம் அடிக்கின்றார்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர், 20 க்கு கை உயர்த்திய இந்த சமூகத் துரோகிகள் இவ்வளவு காலமும் ‘மழை காலத்தில் புற்றுக்குள் ஒளித்த பாம்பு’ போல் இருந்துவிட்டு, இன்று தொடக்கம் படமெடுத்து ஆடத் தொடங்குகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, “தேர்தல் மேடைகளில் ராஜபக்ஷக்களை மோசமாக விமர்சித்து, மக்கள் மத்தியில் வாக்குகளை சூறையாடி வெற்றி பெற்றார்கள். பின்னர் சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாமல், அவர்களின் தலைமைகளுக்கும் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டிவிட்டு, கையை உயர்த்தினார்கள்.

தமது சொந்த நலன்களுக்காகவும் பட்ட கடன்களை அடைப்பதற்காகவுமே, இவர்கள் பெரமுன அரசுக்கு ஆதரவளித்து, கோட்டாவை சர்வ வல்லமை பொருந்தியவராக மாற்றினார்கள். இவர்கள் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த கேவலம் கேட்டவர்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் எம்.பியாவதற்கு முன்னரேயே, ‘வென்ற பின்னர் அரசுக்கு ஆதரவளிப்போம்’ என்று பகிரங்கமாக சொன்னவர். கட்சியின் கொள்கைக்கு மாறாக இவர் கருத்து தெரிவித்தவர்.

புத்தளத்தில் ‘மரத்தில் ஒரு காலையும், மயிலில் மற்றொரு காலையும் வைத்துக்கொண்டு” பொதுச் சின்னத்தின் மூலம் பதவிக்கு வந்த  அலி சப்ரி, அடாத்தாகப் பிடித்து பறிபோகவிருந்த தனது கள்ளக் காணிகளை காப்பற்றுவதற்காக, தனது கட்சித் தலைமைக்கும் மாறுபாடு செய்து 20 க்கு ஆதரவளித்தார். ஏனைய எம்.பிக்கள் அனைவரும் பக்கா டீலர்கள்.

எனவே, சமூகத்துக்கு இவர்கள் எதையாவது செய்ய வேண்டுமென்று உளமார விரும்பினால், அறிக்கைகள் விடுவதை அவசரமாக நிறுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Previous Post

தோணி கவிழ்ந்து மீனவர் பலி

Next Post

இன்றைய தினம் சில வேளைகளில் மழை பெய்யக்கூடும்

Next Post

இன்றைய தினம் சில வேளைகளில் மழை பெய்யக்கூடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures