Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

‘மொட்டு’க் கூட்டணியை எவராலும் பிளவுபடுத்த முடியாது – கெஹலிய

February 10, 2021
in News, Politics, World
0

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராகவும், அந்தக் கட்சி தலைமையிலான கூட்டணியின் தலைவராகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவே உள்ளார். எனவே, இந்தப் பலமிக்க கூட்டணியை எவராலும் பிளவுபடுத்த முடியாது.

என்று ஊடகத்துறை வெகுஜன அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ள கருத்துத் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்பது ஒரு பரந்த கூட்டணியாகும். எனவே, இதன் உறுப்பினர்களுக்கு வெவ்வேறு கருத்துக்களை – கோரிக்கைகளை முன்வைப்பதற்கு உரிமை இருக்கின்றது. அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு மாத்திரமல்ல சகலருக்கும் அந்த உரிமை உண்டு. எனினும், அவை தொடர்பான இறுதித் தீர்மானம் கட்சியின் உயர்மட்டத்திலேயே எடுக்கப்படும்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராகவும், அந்தக் கட்சி தலைமையிலான கூட்டணியின் தலைவராகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவே உள்ளார். தலைவரை மாற்றும் உத்தேசம் இதுவரைக்கும் இல்லை.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான இந்தப் பலமிக்க கூட்டணியை எவராலும் பிளவுபடுத்த முடியாது – என்றார்.

Previous Post

பொலிகண்டி வரையான தொடர் போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Next Post

கருணா அம்மானுக்கு எதிரான மனு வாபஸ் !

Next Post

கருணா அம்மானுக்கு எதிரான மனு வாபஸ் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures