Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.நாவுக்கு அடிபணிந்தது அரசு! – சஜித் அணி கருத்து

January 26, 2021
in News, Politics, World
0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானத்திலிருந்து விலகிவிட்டோம் எனவும், இலங்கையை ஐ.நா. மிரட்ட முடியாது எனவும் வாய்ச்சவால் விட்ட கோட்டாபய அரசு, இன்று போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிப்பதற்கான மூவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்துள்ளது. ஆரம்பத்தில் வீரவசனம் பேசிய அரசு, தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்தமை ஐ.நாவுக்கு அடிபணிந்தமைக்கு ஒப்பானதாகும்.

என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இந்தப் புதிய ஆணைக்குழு இம்முறை ஐ.நாவின் பிடியிலிருந்து தப்பும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் அமைக்கப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

கடந்தகால ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஆராய்கின்றோம் என்ற பெயரில் காலத்தைக் கடத்தும் நோக்கிலும் புதிய ஆணைக்குழுவை இந்த அரசு நிறுவியிருக்கக்கூடும்.

எனினும், நாட்டையும் மக்களையும் ஏமாற்றுவது போல் ஐ.நாவையோ அல்லது சர்வதேச சமூகத்தையே இந்த அரசு ஏமாற்ற முடியாது.

ஐ.நாவின் உறுப்புரிமை நாடான இலங்கை, மனித உரிமைகள் சபையின் கொள்கைகளை மீறிச் செயற்பட முடியாது- என்றார்.

Previous Post

இறுதிப்படுத்தப்பட்டுள்ளது முத்தரப்பு உடன்படிக்கை!

Next Post

அரசை வீட்டுக்குத் துரத்தியடிக்கும் காலம் நெருங்கிவிட்டது – மங்கள

Next Post

அரசை வீட்டுக்குத் துரத்தியடிக்கும் காலம் நெருங்கிவிட்டது – மங்கள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures