Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இணையத்தில் வைரலாகும் மோடியின் அம்மாவுக்கு சென்ற கடிதம்

January 25, 2021
in News, Politics, World
0

பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபென் மோடிக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான கடிதம் எழுதியுள்ளார்.

அவர் பிரதமர் மோடியின் தாய்க்கு எழுதிய கடிதத்தில்,

நான் இந்த கடிதத்தை மிகுந்த மன வேதனையுடன் எழுதுகிறேன். மூன்று கறுப்புச் சட்டங்களால் இந்த குளிர்ந்த குளிர்காலத்தில் தேசத்துக்கும், உலகத்துக்கும் உணவளிக்கும் அன்னதாதாக்கள் டெல்லியின் சாலைகளில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இதில் 90-95 வயதுடைய முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் அடங்குவர். குளிர்ந்த காலநிலை மக்களை நோய்வாய்ப்படுத்துகிறது. அவர்கள் தியாகியாக இருக்கிறார்கள், இது நம் அனைவருக்கும் கவலை அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரம் விவசாயிகளுடன் பல மாதங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹர்பிரீத் சிங், சில நாட்களுக்கு முன்பு சிம்லாவில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார். ஒரு நாள் காவலில் வைக்கப்பட்ட பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மேலும் அதானி, அம்பானி மற்றும் பிற கார்ப்பரேட் குடும்பங்களின் உத்தரவின் பேரில் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று கறுப்புச் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லையில் இந்த போராட்டம் அமைதியாக நடைபெறுகிறது.

இந்தச் சட்டங்களால் விவசாயிகள் அதிருப்தி அடைந்து ஏமாற்றமடைந்து தங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள். நாட்டின் விவசாயிகள் இந்த சட்டங்களில் எந்த திருத்தங்களையும் விரும்பவில்லை, ஆனால் அவற்றை இரத்து செய்ய விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் சங்கங்களும், மத்திய அரசும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன, ஆனால் தற்போது வரை எந்தவொரு உறுதியான முடிவும் எட்டப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர், நான் இந்த கடிதத்தை மிகுந்த நம்பிக்கையுடன் எழுதுகிறேன். உங்கள் மகன் நரேந்திர மோடி நாட்டின் பிரதமர்.

நீங்கள் கூறினால் நிறைவேற்றிய பண்ணை சட்டங்களை அவர் திரும்பப் பெறுவார் என்று நான் நினைக்கிறேன், ஒரு நபர் தனது தாயைத் தவிர வேறு யாரின் வார்த்தையையும் மறுக்க முடியும், ஏனெனில் நம் நாட்டில் தாய் ஒரு கடவுளாக கருதப்படுகிறார்.

உங்கள் மகன் பிரதமர் மோடி உங்கள் கோரிக்கையை ஒருபோதும் மறுக்க மாட்டார். உங்கள் மகன் உங்கள் பேச்சைக் கேட்டு இந்த கறுப்புச் சட்டங்களை ரத்து செய்வார் என்று நான் நம்புகிறேன். முழு நாடும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும்.

ஒரு தாய் மட்டுமே தன் மகனின் காதை பிடித்து இழுத்து உத்தரவு போடலாம். இந்த மூன்று சட்டங்களும் இரத்து செய்யப்பட்டால், அது முழு நாட்டிற்கும் கிடைத்த வெற்றியாக இருக்கும், இதில் யாருக்கும் தோல்வியில்லை என்றும் அவர் குரிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Previous Post

திருகோணமலையில் மாணவர்கள் உட்பட 14 பேருக்கு கொரோனா

Next Post

வட மாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்களை மீளத்திறக்க அனுமதி!

Next Post

வட மாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்களை மீளத்திறக்க அனுமதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures