எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது . இதையடுத்து வடமாகாண பாடசாலைகள் தமது கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை அதிபர்கள் மேற்கொண்டு வருகின்றனார் .
இந்நிலையில் நீண்ட காலமாக பாடசாலை செயற்பாடுகள் இன்றி வகுப்பறைகள் , பாடசாலையை சூழவுள்ள பகுதிகள் பெரும் பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்றது . இந்நிலையில் மாணவர்களின் நன்மை கருதி பாடசாலையில் சிரதானப்பணிகள் மேற்கொள்ளவதற்கு பெற்றோர்களுக்கு வகுப்பாசிரியரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பெற்றோர்களை நாளை சனிக்கிழமை காலை 8 மணியளவில் சிரமதானத்திற்குரிய மண்வெட்டி , கத்தி குப்பைவிறாண்டி போன்ற உபகரணங்களுடன் பாடசாலைக்கு சமூகமளிக்குமாறு மேலும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

