உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று அதிகாலை 5 மணி முதல் சில பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன.
அதன் படி, கண்டி பூஜாபிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதி பமுனுகம, தினவத்த மற்றும் எஹெலியகொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதி மொரகல கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் இன்று காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

