புதிய ஆண்டில் அலுவலக கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மங்கள விளக்கு ஏற்றப்பட்டு தேநீர் விருந்துபசாரம் இடம்பெற்றது குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.ச.ம சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் 5 மாவட்டங்களில் அரச அதிபர்கள் மற்றும் வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் ஐந்து மாவட்டத்தின் பாதுகாப்பு படை தளபதிகள் வடக்கு மாகாண காவல்துறை மா அதிபர் மற்றும் திணைக்களத் தலைவர்கள் வடக்கு மாநகர முதல்வர் என பலரும் கலந்து கொண்டனர்.

