முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரத்தில் 54 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் 1,794 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்காக கடந்த 20 ஆம் திகதி முதல் 350 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் வாகனத்தை செலுத்துதல் மற்றும் போக்குவரத்து விதிமுறிகளை மீறும் நபர்களை அடையாளம் காண நாடு முழுவதும் 9,000 காவல்துறை பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் ஐவர் உயிரிழந்ததுடன், ஐவர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

