திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தென்னிலங்கை ஆய்வுகூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட பி.சி .ஆர் முடிவுகள் இன்று காலை வெளியாகியிருந்தன. இந்த முடிவுகளின் அடிப்படையில் 39 வயதான வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மருதனார்மடத்தில் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதன் மூலம் சங்கானை, சுன்னாகம், திருநெல்வேலி ஆகிய சந்தைகளுக்கு தொற்று பரவியிருக்கின்றது.
மேலும் நேற்றையதினம் அனைத்து சந்தைகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் இன்று காலையிலிருந்து திருநெல்வேலி சந்தையின் வெளிப்புறம் மற்றும் அருகில் பல வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை காணக்கூடியதாக இருந்தது.

