யாழ்ப்பாணம் – சங்கானை நகரில் அமைந்துள்ள மீன் சந்தை மற்றும் மதுபானசாலை என்பன மறு அறிவித்தலை வரை மூடப்பட்டுள்ளன. சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் இந்த நடவடிக்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து காரைநகருக்கு திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று (27) உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்களில் தொடர்புடையவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், சங்கானை மீன் சந்தையைச் சேர்ந்த 36 வியாபாரிகளும், சைக்கிள் கடை ஒன்றை சேர்ந்த 6 பேரும், மதுபானசாலையை சேர்ந்த 4 பேரும் என மொத்தமாக 46 பேரின் குடும்பங்கள் சுய சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு குறித்த தொற்றாளி சென்றதால் வைத்தியசாலையை 3 நாட்களுக்கு மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வைத்தியசாலையின் சேவையாளர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

