Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழர்கள் பயங்கரவாதிகளை நினைவுகூரவில்லை – விக்கி

November 28, 2020
in News, Politics, World
0

தமிழர்கள் பயங்கரவாதிகளை நினைவுகூரவில்லை. சிங்கள இராணுவத்திடமிருந்து தம்மைப் பாதுகாக்க போராடிய வீரர்களையே நினைவுகூருகின்றனர். பெரும்பான்மை சமூகம் பயங்கரவாதி என்று முத்திரை குத்துபவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் அல்லர்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் க.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

அவர் ஆங்கிலத்தில் அளித்த கேள்வி – பதிலிலேயே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். அந்தப் பதிலில், “தமிழர்கள் பயங்கரவாதிகளை நினைவில் கொள்ளவில்லை. போரில் உயிரிழந்த தங்களின் அன்பானவர்களையே நினைவு கூருகின்றனர். அவர்கள் யாரும் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் அனைவரும் எங்கள் மகன்கள், மகள்கள், தந்தைகள், தாய்மார்கள், சகோதரர்கள், சகோதரிகள், மாமாக்கள், அத்தைகள், மருமகன்கள், மருமகள், உறவினர்கள் மற்றும் பலர்.

கெப்பெடிபொல திஸாவே ஒரு சிங்களத் தலைவராக இருந்தார். அவர் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினார். ஆனால், அவர் இன்று ஒரு வீரன் என்று அழைக்கப்படுகிறார். அவரது நினைவாக சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயினும்கூட ஆங்கிலேயர்கள் அவரை ஒரு குற்றவாளி, பயங்கரவாதி என்று அழைத்து அவரை தேடப்படும் மனிதராக அடையாளப்படுத்தியிருந்தனர். ஆனால் அவர் சிங்கள மக்கள் மத்தியில் ஹீரோ. ஆகவே, முதலில், தமது உரிமைகளுக்காக, தனிநபராகவோ அல்லது கூட்டாகவோ போராடும் எவரையும் நீங்கள் ஒரு பயங்கரவாதி என்று அழைக்க முடியாது.

எங்கள் இளைஞர்கள் சிங்கள இராணுவத்தை விரட்ட தங்கள் மக்களுக்காக போராடினர். 1958, 1961, 1977, 1983 மற்றும் கலவரங்களில் தமிழர்களைப் பயமுறுத்துவதற்காக அவர்கள் தங்கள் குண்டர்களைப் பயன்படுத்தினர். அப்பாவி ஆண்கள் குத்திக் கொல்லப்பட்டனர், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர், குழந்தைகள் வெட்டப்பட்டனர், கொல்லப்பட்டனர், பல அப்பாவிகள் கார்களில் போடப்பட்டு தீ வைக்கப்பட்டனர். தமிழர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

அவர்கள் தமிழர்கள் என்பதாலன்றி வேறு எந்த காரணத்திற்காகவும் அல்ல. காவற்துறை மற்றும் இராணுவம் மறுபுறம் பார்த்துக் கொண்டிருக்கும் போது இவை அனைத்தும் செய்யப்பட்டன. இது அரச பயங்கரவாதம்.சுதந்திர காலத்திலிருந்து தமிழர்கள் இப்படி நடத்தப்படுவதற்கு அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் திறமையான, கடின உழைப்பாளி, மனசாட்சி உள்ளவர்கள் .

நாடு முழுவதும் சிங்கள மற்றும் தமிழருக்கு சம அந்தஸ்து ஆரம்பத்திலேயே வழங்கப்பட்டிருந்தால், சமூகங்களுக்கிடையேயான முரண்பாடு ஏற்பட்டிருக்காது. எதிர்காலத்தில் ஓர் இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை. ஆனால், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நம் மக்களை மீண்டும் வன்முறையில் ஆழ்த்துவதை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது.

இனப்பிரச்னைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை வழங்குவதும், வல்லரசுகள் வன்முறைச் சூழலை உருவாக்குவதைத் தடுப்பதும் அரசாங்கத்தின் கைகளிலேயே உள்ளது” என்றுள்ளது

Previous Post

நாடாளுமன்ற உரையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Next Post

சங்கானை பகுதியில் உள்ள மீன் சந்தை மூடப்பட்டது

Next Post

சங்கானை பகுதியில் உள்ள மீன் சந்தை மூடப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures