Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

6 மாவட்­டங்­களில் இன்று பணி­ப்ப­கிஷ்­க­ரிப்பு.!

September 13, 2017
in News
0
6 மாவட்­டங்­களில் இன்று பணி­ப்ப­கிஷ்­க­ரிப்பு.!

மாலபே தனியார் மருத்­து­வக்­கல்­லூரி தொடர்பில் எழுந்­துள்ள சர்ச்­சை­களை தீர்ப்­ப­தற்­காக ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட குழுவின் அறிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்து இன்று இரண்டாம் நாளாக பல பகு­தி­களில் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் பணிப்­ப­கிஷ்­க­ரிப்­பினை முன்­னெ­டுக்­கவுள்ளது.

நேற்று முன்­தினம் முதல் முன்­னெ­டுத்­து­வரும் தொடர்ச்­சி­யான பணி­ப்ப­கிஷ்­க­ரிப்பின் இரண்டாம் நாளாக இன்­றைய தினத்தில் வவு­னியா, மாத்­தறை, மாத்­தளை, அம்­பாறை, பதுளை மற்றும் மொன­ரா­கலை ஆகிய மாவட்­டங்­களில் ஒருநாள் அடை­யாள வேலை நிறுத்­தத்­தினை மேற்­கொள்­ள­வு­ள்ளதா­கவும் அச்­சங்­கத்தின் செய­லாளர் வைத்­தியர் நவீந்த டி சொய்ஷா தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், சைட்டம் மாலபே தனியார் மருத்­து­வக்­கல்­லூரி விவ­காரம் குறித்தும் அதில் காணப்­ப­டு­கின்ற குறை­பா­டுகள் தொடர்­பிலும் சகல மட்­டத்­திற்கும் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ளோம். இது­வ­ரையில் குறித்த பிரச்­சி­னைக்­கான தீர்­வினை அர­சாங்கம் முன்­வைக்­க­வில்லை.

இதில் எழுந்­துள்ள நடை­முறை சிக்கல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்­கை­யொன்­றினை தயா­ரிப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. அவ்­வாறு நிய­மிக்­கப்­பட்ட குழுவின் அறிக்­கை­யா­னது சிலரின் அர­சியல் தேவைப்­பா­டு­க­ளுக்­க­மைய மாலபே தனியார் மருத்­து­வக் ­கல்­லூரி சட்டரீதி­யா­னது என்­பதை காட்­டு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றது. என­வேதான் இதற்கு எதி­ரா­கவும் சைட்டம் மாலபே தனியார் மருத்­துவ கல்­லூ­ரியை தடைசெய்தல் உள்­ளிட்ட பல்­வேறு கோரிக்­கைகளை முன்­வைத்து இந்த போராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்ளோம்.

மாவட்ட ரீதியில் சுழற்சி முறையில் சகல வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் இந்த போராட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­துடன் எதிர்­வரும் 15 ஆம் திகதி வரையில் நடத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம். இதன்­போது வேலை­நி­றுத்தம் இடம்­பெறும் மாவட்­டங்­களின் வைத்­தி­ய­சா­லை­களில் சைட்டம் எதிர்ப்பு பதா­கைகள் மற்றும் கறுப்­புக்­கொடி என்­ப­னவும் பறக்­க­வி­டப்­படும். அத்­துடன் இது தொடர்பில் மாவட்ட ரீதியில் மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்­வினை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம் என்றார்.

குறித்த வைத்­தி­யர்­களின் பணி­ப்ப­கிஷ்­க­ரிப்­பா­னது நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை முதல் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. அதன்­படி நேற்று முன்­தினம் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், முல்­லைத்­தீவு, திரு ­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, நுவ­ரெலியா அம்­பாந்­தோட்டை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்­டங்­களில் முன்­னெ­டுக்கப்­ பட்­டி­ருந்த நிலையில் குறித்த மாவட்­டங்­களில் மருத்துவ நடவடிக்கைகள் ஸ்தம் பித்ததையடுத்து அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்திருந் தனர். இன்றைய தினம் இரண்டாம் கட்ட மாக வவுனியா, மாத்தளை, அம்பாறை, பதுளை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப் படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஆசிரியருடன் காதல் லீலை புரிந்த அதிபர் !!

Next Post

காணாமல்போனோ­ருக்­கான அலு­வ­ல­கம் வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்து

Next Post
காணாமல்போனோ­ருக்­கான அலு­வ­ல­கம் வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்து

காணாமல்போனோ­ருக்­கான அலு­வ­ல­கம் வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures