Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

50 முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலுடன் ஞான­சார தேரர் !!

September 11, 2019
in News, Politics, World
0

ஏப்ரல் 21 குண்டுத் தாக்­குதல் தொடர்­பாக நாட்டின் பழைய அடிப்­ப­டை­வாத இயக்­கங்­களைச் சேர்ந்த எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. இதனால் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­க­ளினால் மீண்டும் தாக்­கு­தல்கள் இடம் பெறலாம். 50 முஸ்லிம் பயங்­க­ர­வாத அமைப்­பு­களின் பெயர்­பட்­டியல் எம்­மிடம் இருக்­கி­றது என பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

எம்­பி­லிப்­பிட்டி பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் வர்த்­த­கர்கள் மத்­தியில் உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, ‘பெருந்­தொ­கை­யான பணம் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்குக் கிடைக்கப் பெற்­றுள்­ளது. அவர்கள் எமது நாட்­டையும், இனத்­தையும், கலா­சா­ரத்­தையும் அழித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இந்த அடிப்­ப­டை­வாத அமைப்­பு­க­ளுக்கு எதி­ராக இது­வரை சட்டம் அமுல் நடத்­தப்­ப­ட­வில்லை. எமது அர­சி­யல்­வா­தி­களின் அனு­ச­ரணை இருப்­ப­த­னாலே சட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை.

பெரும் தொகை­யான பணம் சட்டவிரோ­த­மாக நாட்­டுக்குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. இந்­தப்­பணம் எமது நாட்டை மாத்­தி­ர­மல்ல எமது கலா­சா­ரத்­தையும் அழிப்­ப­தற்குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

நாட்டின் வங்கிக் கட்­ட­மைப்பும் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. ஷரீஆ சட்டம் நாட்டில் அமுலில் உள்­ளது. இது நாட்டின் சட்­ட­மல்ல. இது இஸ்­லா­மி­யரின் இறை­வனின் சட்டம். இச்­சட்­டத்தின் படியே முஸ்­லிம்­க­ளுக்­கான வங்கி, காதி நீதி­மன்றம், ஷரீஆ பாட­சா­லைகள், பல்­க­லைக்­க­ழ­கங்கள் இயங்­கு­கின்­றன. இவை எங்­க­ளது அர­சி­ய­ல­மைப்­புக்­குட்­பட்­டவை அல்ல. எமது அர­சி­ய­ல­மைப்பு பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­ட­தாகும்.

18 மற்றும் 19 ஆவது திருத்­தங்கள் இவ்­வாறே கொண்டு வரப்­பட்­டன. ஆனால் ஷரீஆ சட்டம் இவ்­வாறு இயற்­றப்­பட்ட சட்டம் அல்ல. இறை­வனின் சட்டம் இது என்­கி­றார்கள். அச்­சட்­டத்தை மாற்­ற­மில்­லாது அமுல்­ப­டுத்த வேண்டும் என்­கி­றார்கள். எமது நாட்டின் சில அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் அடிப்படைவாதிகளின் பணத்துக்கு அடிமைப்பட்டு விட்டார்கள். இலஞ்சம் பெறுகிறார்கள்.

நாம் இந்த நிலைமையை தொடர்ந்து மக்களுக்குத் தெளிவுபடுத்தி வருகிறோம்’ என்றார்

Previous Post

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது கருவிழியை அடையாளம் காண்பதற்கு புதிய நடைமுறை

Next Post

ஓரிரு நாட்கள் பிரிவிலும் ஆரத்தழுவிக் கொண்ட ஆருயிர் நண்பர்கள்

Next Post

ஓரிரு நாட்கள் பிரிவிலும் ஆரத்தழுவிக் கொண்ட ஆருயிர் நண்பர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures