கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் புலி முருகன். இந்த படத்தை இயக்கிய இயக்குனர் வைசாக், தற்போது மம்முட்டியை வைத்து மதுர ராஜா என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஏற்கனவே அவரது இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு மம்முட்டி பிரித்திவிராஜ் நடிப்பில் வெளியான ‘போக்கிரி ராஜா’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது
இந்தப் படத்தில் மம்முட்டியும் முதல் பாகத்தில் அவருக்கு தம்பியாக பிரித்விராஜூக்கு பதிலாக நடிகர் ஜெய்யும் நடிக்கின்றனர். பிரித்விராஜ் தற்போது பிசியான நடிகராகவும், அதே சமயத்தில் இயக்குனராக மாறி தற்போது மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற படத்தையும் இயக்கி வருவதால் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்க முடியாமல் போயிற்று.
இந்தநிலையில் சமீபத்தில் தனது லூசிபர் படத்தின் டிரைலரை பிரித்விராஜ் வெளியிட்டார். இதை பார்த்துவிட்டு இயக்குனர் வைசாக், பிரித்விராஜுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் அதைத்தொடர்ந்து அவருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட பிரித்விராஜ், மதுர ராஜா படத்தின் டீசரை பார்த்ததாகவும் அது தனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியதாகவும் பாராட்டியுள்ளார். மேலும் இந்தப்படத்தின் மூன்றாம் பாகத்தை தூங்கும்போது தான் ஏற்கனவே முதல் பாகத்தில் நடித்த சூர்யா கதாபாத்திரத்திற்கு தன்னையே நடிக்க அழைக்குமாறு வைசாக்கிற்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.