தமிழில் பாசில் இயக்கத்தில் வெளியான படம் ‘கற்பூர முல்லை.’ இதுதான் நடிகை அமலா தமிழில் நடித்த கடைசி படம்.
இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 28 வருடங்களான நிலையில் அமலா தமிழ் சினிமாவில் ரீ–-எண்ட்ரியாகிறார்.
‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் 18-வது தயாரிப்பாக இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் சர்வானந்துடன் கதாநாயகியாக ரிது வர்மா நடிக்கிறார். சர்வானந்துக்கு அம்மாவாக அமலா நடிக்கிறார்.