Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2025 இல் நாமலை ஜனாதிபதியாக்க, மஹிந்த முயற்சிக்கிறார்..!

December 18, 2017
in News, Politics
0

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்சவை நாட்டின் தலைமைத்துவத்திற்கு கொண்டு வரும் நோக்கில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்து தனது எதிர்கால இலக்கை நிறைவேற்ற முயற்சிப்பதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இணைக்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை மகிந்த, நாமல், பசில் ராஜபக்ச ஆகியோரே சீர்குலைத்தனர்.

இவர்கள் தமது தனிப்பட்ட இலக்கை அடைய மேற்கொண்ட வேலைத்திட்டமே இதற்கு காரணம்.

இதனால், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மீது அதிருப்தியடைந்தவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தோல்வியில் தமது பாதுகாப்பு உறுதிப்படும் என பசில் ராஜபக்ச எண்ணுகிறார். இதன் காரணமாகவே இரண்டு தரப்பும் இணைவதை அவர் எதிர்க்கின்றார் என எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

வேட்புமனுக்களை சரியாக பூர்த்தி செய்யமுடியாதவர்கள், எப்படி நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்கலாம்?

Next Post

“தமிழ் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை, முஸ்லிம் காங்கிரசுக்கு தாரைவார்த்துக் கொடுத்தது”

Next Post

"தமிழ் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை, முஸ்லிம் காங்கிரசுக்கு தாரைவார்த்துக் கொடுத்தது"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures