Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2020இல் ஜனாதிபதியாகும் கோத்தபாய!

July 16, 2017
in News, Politics
0

2020ஆம் ஆண்டில் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போகின்றார் என்ற பயத்தின் காரணமாக அவரைக் கைது செய்து சிறையிலடைப்பதற்கு தேசிய அரசு திட்டமிட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:-

மஹிந்த அணிக்கான செல்வாக்கு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருவதால் அந்தச் செல்வாக்கை எப்படியாவது குறைத்துவிடுவதற்கு தேசிய அரசு திட்டமிடுகின்றது.

அந்தச் செல்வாக்குக்குப் பயந்துதான் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திப்போட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல்களுக்கும் அதே கதிதான்.

கோத்தபாய ராஜபக்ஷ 2020 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரோ என்ற அச்சம் இந்தத் தேசிய அரசுக்கு இருக்கின்றது.

அதன் காரணமாக இப்போதிலிருந்தே அவரை அடக்கி ஒடுக்குவதற்கு தேசிய அரசு திட்டமிடுகின்றது. அவரைக் கைது செய்து சிறையிலடைப்பதற்குச் சதி செய்கின்றது.

அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைத் தேடிக்கொண்டிருக்கின்றது. இந்தக் கீழ்த்தரமான வேலைகளை தேசிய அரசு செய்யக்கூடாது.

கோட்டாபயவை கைது செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் ஆதரவு வழங்குவார்களாக இருந்தால் அவர்களைப்போல் மனநோயாளிகள் வேறு எவரும் இருக்கமுடியாது.

இந்தத் தேசிய அரசு கோடிக்கணக்கில் திருடியுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பிரதமர் பதவி விலகவேண்டும். அலோசியஸ் சிறையிலடைக்கப்பட வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்று இறுதி நேரத்தில்தான் வெளியிடுவோம். மைத்திரிபால வெற்றி பெற்றமைக்குக் காரணம் இறுதிநேரம் வரை இரகசியம் பாதுகாத்தமைதான். நாமும் அவ்வாறு செய்து வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

Previous Post

அணு விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பிறகே இறைச்சியை உண்டார் சதாம் ஹூசைன்’

Next Post

ஐக்கிய நாடுகள் பிரதிநிதி இராணுவ அதிகாரியைப் போன்று செயற்படுகிறார் – நீதி அமைச்சர்

Next Post

ஐக்கிய நாடுகள் பிரதிநிதி இராணுவ அதிகாரியைப் போன்று செயற்படுகிறார் – நீதி அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures