Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

20 இற்கு முஸ்லிம்கள் விளக்கமில்லாமல் ஆதரவு வழங்கியுள்ளனர்- கருணா

October 8, 2017
in News, Politics
0

அரசாங்கம் கொண்டுவரவுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு கிழக்கு மாகாண சபை விளக்கம் இல்லாமல் ஆதரவு வழங்கியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
வடக்கிலும், கிழக்கிலும் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும் தெரியாது எனவும் கருணாம்மான் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மத்தியகுழு கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த 20 ஆவது சட்டத்தில் ஒரு வசனம் சிங்களத்தில் சேர்க்கபட்டுள்ளது. அதற்கு ஆங்கிலத்தில் கூட மொழி பெயர்ப்பு இல்லை இதற்கு சம்பந்தனும், சட்ட ஆலோசகர் சுமந்திரனும் சேர்ந்து வாக்களித்துள்ளார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் அல்லாமல் சில முஸ்லிம் கட்சிகளும் வாக்களித்துள்ளது. சிறு பான்மை இனமாக இருந்து கொண்டும், சிறுபான்மை கட்சிகளாக இருந்து கொண்டும் இதற்கு வாக்களித்தமை எமது தலையில் நாமே மண் அள்ளி போட்டுக் கொண்டது போன்றதாகும்.
இதை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை வடமாகாண சபை முற்று முழுதாக எதிர்த்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கின்றோம். ஏன் என்றால், விக்னேஷ்வரன் ஐயா ஒரு சட்ட வல்லுநர்.
ஆனால், கிழக்கு மாகாணசபை அதை ஆதரித்துள்ளது இவர்களுக்கு இதனுடைய நன்மை தீமை பற்றி தெரியவில்லை.
பல சட்ட வல்லுனர்கள் எல்லாம் இருந்தும் இந்த புதிய அரசியல் அமைப்பு பற்றிய சாதக, பாதகம் தெரியாமல் வாக்களிதுள்ளார்கள்.
எமது தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களை கொண்டு அடகு வைத்துள்ளதாகவும் முரளிதரன் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

எதிர்வரும் தேர்தலில் UNP யுடன் இணைந்து SLMC போட்டி- ஹக்கீம்

Next Post

தாக்குதல் சம்பவம் குறித்து ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரல்

Next Post
தாக்குதல் சம்பவம் குறித்து ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரல்

தாக்குதல் சம்பவம் குறித்து ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures