மக்கள் விடுதலை முன்னணியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் நாட்டைச் சீர்குலைக்கும் நோக்குடையது என உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
அரசாங்க கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் தெரியப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.