2ஆம் உலகப்போரின்போது உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில், லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் பங்கேற்றனர்.
லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 1944ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இங்கிலாந்து ராணி எலிசபத் உட்பட அரச குடும்பத்தினர் பலர் பங்கேற்றனர். அப்போது, பாரம்பரிய இசை நிகழ்ச்சி மற்றும் நடனம் மூலம் அஞ்சலி செலுத்தப்பட்டது.