Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாடு வாழ் தமிழர் நல துறையை அமைக்க வேண்டும்: மு க ஸ்டாலின்

July 24, 2021
in News, இந்தியா
0
ஈழத் தமிழர் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்ய வேண்டும்

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன் காத்திட வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை என்ற புதிய துறையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொது மற்றும் மறுவாழ்வு துறையின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, செஞ்சி கே. எஸ். மஸ்தான், தலைமை செயலாளர் வெ இறையன்பு உள்ளிட்ட பலரும் பங்குபற்றினர்.

இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசியதாவது.

‘ வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நலன் பேணவும், அங்கு பாதிப்புக்குள்ளாகும் தமிழர்களுக்கு உதவிடவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் என்ற நலத்துறை என்ற புதிய துறையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியம் அமைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழி காட்டுதல் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். முகாமில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள், குடிநீர், கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாதாந்திர பண கொடையை உயர்த்தி அளித்திட வேண்டும். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு காப்பீடு திட்டம், அடையாள அட்டை, கட்டணமில்லாத தொலைபேசி உதவி மையம் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதுடன் வெளிநாடுவாழ் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை இணையவழியில் கற்பிப்பதற்கான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்.’ என முதல்வர் மு. க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

அடுத்தடுத்து வெற்றிப் படங்களை குவிக்கும் பிரபு திலக்கின் புதிய படம்!

Next Post

மக்கள் பொறுப்புடன் செயற்பட்டாலே டெல்டா வைரஸிலிருந்து மீள முடியும்

Next Post
மக்கள் பொறுப்புடன் செயற்பட்டாலே டெல்டா வைரஸிலிருந்து மீள முடியும்

மக்கள் பொறுப்புடன் செயற்பட்டாலே டெல்டா வைரஸிலிருந்து மீள முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures